கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...

குறிப்பு: கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் முற்போக்காளர்களை மோதவிடும் திருக்காரியத்தை தொடர்வதற்காகவும், தமது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அவதூறுகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பு முகாமை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழ்மணத்திற்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் திருவாளர் 'பார்ப்பன'மணி, தமிழ்மணத்தில் வாய்சவடால் அடித்துக் கொண்டும், விக்கிபீடியாவை கையில் வைத்துக் கொண்டு விவாதம் என்ற பெயரில் மொக்கையடித்துக் கொண்டும் தமிழ்மணி என்ற நாமகரணத்தோடு தமிழ்மணத்த்தில் உலவிவந்தது ஒரு சதிகார பார்ப்பன கும்பல் என்பதையும், அதில் ஆர்.எஸ்.எஸ் பாசிசவாதிகளும் அங்கம் வகிக்கிறார்கள் என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது என்பதையும் சில மாதங்களுக்கு முன்பு நாம் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினோம்., அப்படி எழுதிய பதிவுகளில் நாம் எழுப்பிய தார்மீக ரீதியானஎந்த கேள்விகளுக்கும் விடையளிக்காமல், ஆதாரத்தோடு மறுக்கவும் வக்கில்லாமல் கள்ள மெளனம் சாதித்து வந்த பார்ப்பனமணி கும்பல் அதன் பின்பு ஒருநாள் திடீரெனகாணமல் போனாது.,

இந்த நிலையில் சும்மா இருக்கப் பொறுக்காமல் அரிப்பெடுத்து போன தமிழ்மணி, தனது சதி செயலுக்கு அச்சாரம் போடுவதற்கு மீண்டும் தமிழ்மணத்தில் பிரவேசித்திருக்கிறார். 'தமிழ்மணியின் இந்த இரண்டாம் வருகையை பற்றியும் அவரை மனதார வரவேற்றும் பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு பதிவிட்டிருந்தேன், அந்த பதிவில் அவர் இதுவரை பதிலளிக்காமல் தவிர்த்து வரும் கேள்விகள் அடங்கிய நம்முடைய பழையபதிவுகளையும் பட்டியலிட்டிருந்தேன். ஆனால் தமிழ்மணி தரப்பிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் நமக்கு மெளனம்தான் விடையாய் கிடைத்திருக்கிறது, அதே போல "சம்பூகன் கம்யூனிஸ்ட்தான்" என்ற எப்போதும் போலவே பின்னூட்டத்தில் பல பெயர்களில் முத்திரை குத்தும் முயற்சியும் தொடர்ந்தது, இப்பொழுது நாம் எழுப்பிய கேள்விகளையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழ்மணி மீண்டும் பதிவிட தொடங்கியிருக்கிறார், எருமைமாட்டின் மீது மழை பெய்தது போல நடந்து கொள்ளும் தமிழ்மணியின் இந்த மழுங்கத்தனமானசெயல் பல்வேறுவிதமான பணி நெருக்கடிகளின் காரணமாக பதிவிடமால் இருந்த நம்மை மீண்டும் இணையத்திற்கு இழுத்து வந்திருக்கிறது, மிழ்மணி இனி தொடர்ந்து திவிடும் நிலையில் அவர் போடும் திவுகளை கொண்டு அந்தபார்ப்பகும்பலை அம்பப்படுத்தும் ம்முடையதிவுகள் தொடர்ந்து வெளிவரும் என்று கிழ்ச்சியோடு சொல்லிக் கொள்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.,

கீழே இருப்பது மிழ்மணியை அம்பப்படுத்தி வெளியானம்முடையழையதிவுகளில் ஒன்று, இப்பொழுது ன்னை பார்ப்பஎதிர்ப்பாளர் போலபாவ்லா காட்டிக் கொண்டு மாவோயிஸ்ட்களை நோக்கி விரலை நீட்டும் மிழ்மணி, து பார்ப்பனீயஅடையாளத்தை றைக்கவியலாமல் தம்முடையழையதிவுகளில் கொடுத்த பல வாக்குமூலங்கள் இந்ததிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது, அதன் காரமாகவே இதனை இங்கு மீண்டும் திந்திருக்கிறேன்.

கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...


எவ்வளவு தூரம் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் "நான் ரொம்ப உத்தமனாக்கும்" என்று அங்கலாய்த்து கொள்வதற்கும், தனது வழக்கமான புரளி மூட்டைகளை திரும்ப திரும்ப‌ அவிழ்த்து விடுவதற்கும் ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும், இந்த அசட்டு துணிச்சலானது பார்ப்பனர்களுக்கு இயல்பிலேயே கை கூடிய ஒன்று.,

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சட்டமன்றத்திலேயே "நான் ஒரு பாப்பாத்தி" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா.,

எப்பொழுதுமே ஆரிய கொழுப்பேறி அதிகார போதையில் திரியும் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த போதையின் உச்சத்தில் சட்டமன்றத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார், வன்முறை வெறியாட்டத்தின் முழு உருவமான ஜெயலலிதா, கலைஞர் அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசியிருப்பதோடு, சபை உறுப்பினர்களின் கேள்விகளூக்கெல்லாம் பதிலளிக்க துப்பில்லாமல் மூத்த உறுப்பினரான “இனமானப் பேராசிரியர்” என்று கலைஞரால் புகழப்பட்ட பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டவர்களை தரக்குறைவாக‌ பேசியதோடு அவர் கொடுத்த பதிலடி தாங்கமுடியாமல் சபையை விட்டு வெளிநடப்பும் செய்திருக்கிறார். டான்சி வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌த்தால் க‌ண்டிக்க‌ப்ப‌ட்டு, அந்த‌ நில‌த்தை திரும்ப‌ த‌ந்துவிடுவ‌தாக‌ க‌த‌றிய‌ இந்த‌ டான்சி ராணி,தி.மு.க‌ அர‌சு ஊழ‌ல் புகாருக்காக‌ முன்பு டிஸ்மிஸ் செய்யப்ப‌ட்ட‌து என்றும் புளுகியிருக்கிறார்.

இப்ப‌டி தன்னை ப‌ற்றி எழுப்பும் எந்த‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில‌ளிக்காம‌ல் "நீ ரொம்ப யோக்கியமா? " என்ற‌ பாணியில் எதிரணியின‌ரை அச‌ட்டுத்துணிச்ச‌லோடு தாக்குவ‌து, பொய்மூட்டைக‌ளை அவிழ்த்துவிடுவ‌து என்ப‌தெல்லாம் எல்லோரும் ந‌ன்க‌றிந்த‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ங்க‌ள்தான்.

இது அரசியல் களத்தில் ஒரு உதாரணம் என்றால் இணையதளத்தில் இந்த பார்ப்பன‌ அசட்டு துணிச்சலுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நமது தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணிதான், கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் அவர் திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பு கொண்ட பின்னூட்டங்களை ஆதர‌வளித்து அனுமதித்திருப்பதை சென்ற பதிவில் எடுத்துக்காட்டியோடு அவரது தளத்தில் "பழைய அனானி" “அனானி 2” என்ற பெயர்களில் தொடர்ந்து உலாவந்த பார்ப்பன இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அவர் பேராதரவு அளித்தையும் சுட்டிக்காட்டியிருந்தேன், இவ்வளவுக்கு பிறகும் கூட நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத தமிழ்மணி கும்பல் “நானும் நாத்திகன்தான், பெரியார் ஆதரவாளன்தான்” என்று கூறி தனது சதிச்செயலுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று முயன்று முயன்று பார்க்கிறது.

பழைய அனானி என்ற பெயரில் எழுதும் இந்துமத வெறியன் பதிலளிக்க துப்பில்லாமல், “சம்பூகனாக எழுதுவது பதிவர் அசுரனா?” என்று ஆருடம் பார்த்துக் கொண்டிருக்கிறான்,. ஆனால் இதற்கு முன்பு அவனை யார் என்று நண்பர்கள் வினவிய பொழுது அவன் அளித்திருக்கும் பதிலை பாருங்கள்.

“அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே.” (பதிவு இங்கே)
கருத்துக்கள்தான் முக்கியம் என்று கூறிய இந்த பழைய அனானிக்கு அவரது கருத்துக்களின் வாயிலாகவே அவர் ஆரிய பார்ப்பன இந்துமத வெறிபிடித்த பாசிசவாதி என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறேன், அதனை மறுக்க வக்கில்லாமல், இது கம்யூனிஸ்ட்கள் வேலை என்று கதற துவங்கி இருக்கிறது தமிழ்மணி கும்பல் .

நான் பதிவர் அசுரன் தான் என்று வதந்தி கிளப்புகிறார்கள், அசுரன் என்ன ஆர்.எஸ்.எஸ்காரனா? அவர் ஏன் சம்பூகனாக எழுத வேண்டும், அவர் பதிவுகளை நான் படித்த வகையில் அவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார், பெரியாரை ஆதரித்துத்தான் எழுதியிருக்கிறார், பின்பு எதற்காக அவர் சம்பூகனாக எழுத வேண்டும்?

தனது கொள்கைக்கு நேரதிராக 'த‌மிழ்'மணி என்று பெயர்சூட்டிக் கொண்டு வெட்கங்கெட்ட முறையில் சமஸ்கிருதத்திற்கு ஆதரவளித்து எழுதிக் கொண்டிருக்கும் உன்னைப்பற்றி உனது கருத்துக்களிலிருந்தே அம்பலபபடுத்தி எழுதினால் அதனை மறுக்க துப்பில்லாமல் கிசுகிசு பேசும் ஆரிய பார்ப்பன வெறியனே உனது வேலைகள் இனி இங்கு பலிக்காது. வேறு ஏதாவது பெயரில் வரமுடியுமா என்று யோசி, உனது கார்யகர்த்தனிடம் (ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிரணைப்பாளன்) கேட்டுப்பார் அவன் வேறு எப்படி மோதவிட்டு இரத்தம் குடிக்கலாம் என்று புது யோசனை சொல்வான்.

த‌மிழ்ம‌ணி என்ப‌து செல்வ‌ன் என்னும் ப‌திவ‌ர்தான் என்ப‌தாக‌வும், அந்த‌ கும்ப‌லில் அதிய‌மான், அரவிந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌வும் பின்னூட்ட‌த்தில் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், ஆதார‌ம் காட்டுகிறார்க‌ள் எனினும் கூட‌ இந்த‌ தொழில்நுட்ப‌ ஆத‌ராங்க‌ளை விட‌வும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து வாயால் கொடுக்கிற வாக்குமூல‌ங்களை ஆதாரமாக கொண்டே அவர் ஒரு ‘பார்ப்பன’மணி என்பதை நான் அம்பலப்படுத்த‌ விரும்புகிறேன்

சரி அவர் போட்டிருக்கும் சமீபத்திய‌ பதிவினையும் அதில் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அவரது அசட்டுத்துணிச்சலையும் இனி பார்ப்போம்.

//சிவனடியார் ஆறுமுகசாமி - சிதம்பரம் - தமிழ் வழிபாடு போன்றவற்றில் என் கருத்துக்கள் பெரியார்தாசனின் கருத்துக்களை ஓட்டியவை (நான் நாத்திகன். ஆனால், அதனை முன்னிருத்தாதவன்).//

தமிழ்மணி நாத்திகராம், எப்ப‌டிப்ப‌ட்ட‌ நாத்திக‌ர் என்று நினைக்கிறீர்க‌ள், பார்ப‌ன‌ ப‌னியா சிந்த‌னை என்று நாத்திக‌ர்க‌ளும், க‌ம்யூனிஸ்ட்க‌ளும் ஒதுக்கி த‌ள்ளூம் இந்துத்துவ கறை படிந்த‌ சிந்த‌னைக‌ளூக்கு வ‌க்கால‌த்து வாங்கும் நாத்திக‌வாதி, ந‌ம்ப‌வில்லையானால் இதோ த‌மிழ்ம‌ணி கூறியிருப்ப‌தை பாருங்கள்


//இயற்கையோடு இணைந்து வாழக்கோரும் இந்திய சிந்தனையை பார்ப்பனிய பனியா என்று தினந்தோறும் காலைமுதல் மாலைவரை திட்டுவது நீங்கள்தானே//(ப‌திவு இங்கே)

இப்ப‌டி பார்ப்ப‌னீய‌ ப‌னியா சிந்த‌னைக‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌ த‌மிழ்ணி இன்று த‌ன்னை நாத்திக‌வாதி என்று கூறிக்கொள்கிறார், அத‌னை நாம் ந‌ம்ப‌ வேண்டும், இப்ப‌டி நாம் கூறிய‌ உட‌னே, "இந்திய‌ சிந்த‌னை என்று பொதுவாகத்தானே கூறினேன்" கூறினேன் என்று த‌மிழ்ம‌ணி ச‌ப்பைக‌ட்டு க‌ட்டுவார், இவ‌ர‌து இந்திய‌ சிந்த‌னை எப்ப‌டிப்ப‌ட்ட‌து என்று அறிந்து கொள்ள‌ அவர‌து இன்னொரு ப‌திவிலிருக்கும் ஸ்டேட்ம‌ண்டை க‌வ‌னித்தால் நாம் அதனை தெளிவாக‌ புரிந்து கொள்ள‌ முடியும்


//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்
மக்கள் விரோதிகளே.//(பதிவு இங்கே)

இதுதான் த‌மிழ்ம‌ணியின் இந்திய‌ சிந்த‌னை, அதாவ‌து ச‌ம‌ஸ்கிருத‌த்தாலும் பூணூலாலும் க‌ட்டி இணைக்க‌ப்ப‌ட்ட‌ பார்ப்ப‌ன மேலாதிக்க‌ம் கொண்ட இந்தியாதான், பார்ப்பணமனி புளகாங்கிதம் அடையும் இந்தியா, அந்த பண்(ணா‌)டைய‌ இந்தியாவில் தோன்றிய‌ பண்(ணா)டை சிந்த‌னைக‌ளான‌ வேத‌ம், ஸ்மிருதி போன்ற‌வைக‌ளை, நாத்திக‌வாதிக‌ளான‌ பெரியாரிய‌வாதிக‌ளும், மார்க்சிய‌வாதிக‌ளும் ம‌றுக்கின்ற‌ கார‌ண‌த்தால்தான் அவ‌ர்க‌ள் மீது சீற்ற‌ம் கொள்கிறார், த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌ம‌ணி.

சமஸ்கிருதத்தால் இணைக்கப்பட்ட இந்தியாவை கனவு காண்கிறாரே தமிழ்மணி இது எந்த சிந்தனையின் தொடர்ச்சி என நினைக்கிறீர்கள், இதோ,


இந்த எல்லா மொழிகளுக்கும்(தமிழ், வங்காளம், மராட்டி, பஞ்சாபி
போன்றவை) ஜீவ ஊற்றாக உணர்வூட்டி வருவது மொழிகளுக்கெல்லாம் அரசி போன்ற தேவமொழியான
சம்ஸ்கிருதம் ஆகும். அதனுடைய பொருட்செறிவினாலும், ஆன்மீக தொடர்பினாலும், அதுவே நம் நாட்டு மக்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும் பொதுமொழியாக இருக்கும் தகுதியுடையது
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.49)
நமது தேசிய மொழி பிரச்சணைக்கு வழி காணும் முறையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பெறும்வரை, வசதிக்காக ஹிந்தி மொழிக்கு நாம் முன்னுரிமை தர வேண்டியிருக்கும்
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.51)

ந‌ம‌து அன்பிற்குரிய‌ த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌மணி, இந்தியாவின் தொட‌ர்பு மொழி ச‌ம‌ஸ்கிருதம்தான் என்பதாக‌ வ‌ரிந்துக‌ட்டி வாதாடுவ‌த‌ன் இர‌க‌சிய‌ம் இப்பொழுது புரிகிறதா நண்பர்களே?

ச‌மஸ்கிருத‌த்தாலும், இந்தியாலும் இணைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த இந்துராஷ்டிர‌ம் ப‌ற்றி அய்யா பெரியாரின் க‌ருத்தை பாருங்க‌ள்


“தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.”

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு



இப்பொழுது புரிந்திருக்குமே தமிழ்மணி எப்படிப்பட்ட நாத்திகவாதி என்று, நவீண வகை ஜனநாயகவாதிகள் போல, இவர் இந்து ராஷ்டிரம் பேசுகின்ற நவீண வகை நாத்திகவாதி.

அடுத்து அவ‌ர் கூறுகிறார் சித‌ம்ப‌ர‌ம் விவாக‌ரத்தில் பெரியார்தாச‌னின் க‌ருத்துதான் அவ‌ருடைய‌ க‌ருத்தாம்.,

அட‌ அட‌ இப்பொழுது க‌ம்யூனிஸ்ட்க‌ளை திட்டுவ‌த‌ற்காக‌ பெரியார்தாச‌னோடு போய் ஒட்டிக்கொள்ளும் த‌மிழ்ம‌ணி சென்ற ப‌திவில் அவ‌ரை ப‌ற்றி எழுதிய‌ வ‌ரியை பாருங்க‌ளேன்.

//பெரியார்தாசன் சிவனை கேவலமாக பேசியிருக்கிறார். மருதையன் நாத்திகர். சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையிலேயேகடவுள் இல்லை, கடவுளை பரப்பியன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி போன்றவற்றை கூறப்போகிறீர்களா? சிவனெல்லாம் ஒரு கடவுளா என்பவற்றை பேசுவீர்களா?//
(பதிவு இங்கே)

இப்ப‌டியெல்லாம் சென்ற‌ ப‌திவில் நாத்திக‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு, பெரியார்தாச‌ன் சிவ‌னை நோக்கி கேவ‌ல‌மாக‌ பேசினாரே என்று சின‌ந்து பேசிவிட்டு, இன்று "பெரியார்தாச‌னின் நிலைப்பாடும் என‌து நிலைபாடும் ஒன்றுதான், நானும் நாத்திக‌ன்தான்" என்று ஒருவ‌ர் பேசுவாரேயானால் அவ‌ர் எவ்வ‌ள‌வு பெரிய‌ அயோக்கிய‌னாக‌ இருக்க‌வேண்டும், ந‌ம்மை எவ்வ‌ள‌வு தூர‌த்திற்கு முட்டாள் என்று அவ‌ர் நினைக்க‌ வேண்டும். நான் கூறிய‌ பார்ப்ப‌னீய‌ அச‌ட்டுத்துணிச்ச‌ல் த‌மிழ்ம‌ணியிட‌ம் எவ்வ‌ள‌வு இருக்கிற‌து பார்த்தீர்க‌ளா, ந‌ண்ப‌ர்க‌ளே?

//ஆனால், இது சம்பந்தமாக மகஇக என்ற கம்யூனிஸ்டு இயக்கம் இதனை உபயோகித்து ஆள் சேர்க்க இறங்கியபோது, இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினேன். கம்யூனிஸ எதிர்ப்பை வழக்கம்போல, பார்ப்பன ஆதரவு, திராவிட எதிர்ப்பு என்று திரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி இல்லை. இதனை எதிர்பார்த்தேன்.//

என்ன‌ அபாய‌த்தை, உண‌ர்த்தும் வித‌மாக‌ ப‌திவுக‌ள் எழுதினீர்க‌ள், த‌மிழ் க‌ருவறையில் நுழைந்துவிடும் அபாய‌த்தை உண‌ர்த்துவ‌தாக‌வா, ஏதோ நீங்க‌ள் இந்த‌ ப‌திவு எழுதிய‌ பிற‌கு அந்த‌ ஒரு ப‌திவை வைத்து உங்க‌ளை 'திராவிட‌ எதிர்ப்பு' 'பார்ப்ப‌ன‌ ஆதரவு' ப‌திவ‌ர் என்று கூறிய‌து போல‌ பேசுகிறீர்க‌ளே த‌மிழ்மணி, உங்க‌ள் ப‌திவில் ப‌ல‌ கால‌மாக‌ ப‌ழைய‌ அனானி என்ற‌ பெய‌ரில் "திராவிட‌ இன‌வெறி அர‌சிய‌ல்" என்றும் "கேவ‌ல‌மான‌ திராவிட‌ அர‌சிய‌ல்" என்றும் திராவிட‌ எதிர்ப்பு பின்னூட்ட‌ங்க‌ள் போட்டு வந்திருக்கிறார், நேற்றைய‌ இந்த‌ ப‌திவிலே அதனை நான் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இப்ப‌டி போட‌ப்ப‌ட்ட‌ பின்னூட்ட‌திலிருக்கும் இந்த‌ க‌ருத்துக்க‌ளுக்கு ஒருமுறை கூட‌ நீங்க‌ள் எந்த‌ ஆட்சேப‌னையும் தெரிவிக்க‌வில்லையே அத‌ன் கார‌ண‌ம் என்ன‌ த‌மிழ்ம‌ணி?

//மேற்குலகின் ஏஜண்டாக தெரசாவும் கத்தோலிக்க திருச்சபையும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ என் ஜிஓக்களும் செயல்படுகின்றனவோ, அதே போல சீனாவின் ரஷியாவின் ஏஜண்டாக இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகளும் அவர்களின் என் ஜி ஓக்களும் செயல்படுகின்றன என்பதையும் நேரடியாக எழுதியுள்ளீர்களா? படிக்க விரும்புகிறேன்.
என்னைப்பொருத்தமட்டில், எவ்வாறு தெரசாவின் புனித பிம்பம் மேற்குலகால் இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறதோ அதே போல, ரஷியர்களாலும் சீனர்களாலும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அறிவுஜீவிகள் புனித பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கருத்தாக்க நாணயத்தின் இரண்டு பக்கங்களே இவர்கள்.
ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.// (பதிவு இங்கே)


இப்ப‌டி ஒரு ப‌திவிலே நீங்க‌ள் எழுதியிருக்கிறீர்க‌ள், அதாவ‌து மேற்குலக மதமான‌ கிறிஸ்த‌வ‌த்தின் ஏஜென்டாக‌ தெர‌சாவும், க‌த்தோலிக்க‌ திருச்ச‌பையும், கிறிஸ்த‌வ‌ என்.ஜி.ஓக்க‌ளூம் செய‌ல்ப‌டுவ‌தாக‌ குறிப்பிட்டு அவ‌ர்க‌ளோடு க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ஒப்பிட்டு, இவ‌ர்க‌ள் இருவ‌ருமே ஏகாதிப‌த்திய(அதாவ‌து கிறிஸ்த‌வ‌ ஏகாதிப‌த்திய‌ம்) க‌ருத்தாக்க‌த்தின் இர‌ண்டு நாண‌ய‌ங்க‌ள் என்று முடிவுக்கு வ‌ந்து

//மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.//

இப்ப‌டி குறிப்பிடுகிறீர்க‌ள், என‌க்கு தெரிந்த‌ வ‌ரையில் 'கிருத்துவ‌ ஏகாதிப‌த்திய‌ம்' என்ற‌ க‌ருத்தாக்க‌மே இந்துத்துவ‌ வெறியர்களுடையது, அதை விட 'பால்பவுடருக்காக' மதம் மாறுகிறார்கள் என்று மதம்மாறுகின்ற மக்களை பார்த்து இழிவுபடுத்துவதும், அலறுவதும், அச்சுஅசல் இந்துமதவெறியர்களுக்கே உரிய கருத்து, இப்ப‌டி ஒரு இந்துத்துவ‌ க‌ருத்தை வைத்திருக்கும் பார்ப்ப‌ன‌ வெறியரான‌ நீங்க‌ள் "நான் திராவிட‌ எதிர்ப்பாள‌ன் அல்ல" என்று கூறினால் எவ‌னும் வாயால் சிரிக்க‌மாட்டான் தமிழ்மணி.

//சமீபகாலமாக ஒரு டிரண்ட் நட்ந்துவந்துகொண்டிருக்கிறது. அது திராவிட/பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களை குறி வைத்து அவர்களை கம்யூனிஸ்டு கட்சிக்குள் உள்ளிழுக்கும் விதமாக கம்யூனிஸ்டுகள் (ஒரே ஆளா, அல்லது கும்பலா என்று தெரியாது) பல பதிவுகளை துவங்கி ஒரே கட்டுரையை பல்வேறு இடங்களில் பதிந்தும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தனர்.//

ப‌ல‌ கால‌மாக‌வே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு டிர‌ண்ட் ந‌ட‌ந்துவ‌ருவ‌தாக‌ எங்க‌ள‌து ந‌ண்ப‌ர்க‌ளும் தோழ‌ர்க‌ளும் கூறுகிறார்க‌ள் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து இஸ்லாமிய‌ர்க‌ளின் பெய‌ரில் ஆபாச‌ ப‌திவு தொட‌ங்கி எழுதுவ‌து, ந‌டுநிலை நாட‌க‌மாடி சிண்டு முடிவ‌து, நேற்று கூட‌ எங்க‌ள‌து அ.மு.க‌ ந‌ண்ப‌ர்க‌ள் இது போன்ற பார்ப்ப‌ன‌ ச‌தி ஒன்றை அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள், இஸ்லாமிய‌ர் பெய‌ரிலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் பெய‌ரிலும் ப‌திவுக‌ளை தொட‌ங்கி இருவ‌ரையும் மோத‌விடும் ச‌தியை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ம‌ற்ற‌ முற்போக்காள‌ர்க‌ளையும் மோத‌விடும் ச‌தியை நீங்க‌ள் செய்து கொண்டிருக்கிறீர்க‌ள், இதெல்லாம் எத‌ற்காக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் செய்கிறார்கள், த‌ங்க‌ளுடைய‌ மேலாதிக்க‌ம் கொண்ட‌ இந்த‌ ச‌மூக‌த்தை க‌ம்யூனிஸ்ட்க‌ளோ பெரியாரிய‌வாதிக‌ளோ மாற்றிவிட‌க்கூடாது என்ப‌துதான் அவ‌ர்க‌ள‌து நோக்க‌மாக‌ இருக்கிற‌து. இதற்காக‌ ப‌ல‌ர் சேர்ந்து ஒரு ப‌திவை எழுதுவ‌து, ப‌ல‌ ப‌திவை ஒருவ‌ர் எழுதுவ‌து என்று பார்ப்ப‌ன‌ர்க‌ள் ப‌ல்வேறு திட்ட‌மிட்ட‌ அனுகுமுறையை கையாண்டு வ‌ருகிறார்க‌ள்.

//இதன் விளைவுகள் நீண்டவை.//

ஆனால் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கையாளும் இந்த‌ கேவ‌லமான‌ உத்தியின் விளைவுக‌ள் எப்பொழுதுமே புஸ்வாண‌ம்தான் என்று ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், பார்ப்ப‌ன‌ர்க‌ள் இப்ப‌டியெல்லாம் ச‌திச்செய‌லிலே இற‌ங்கி ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கையும் க‌ள‌வுமாக‌ வ‌ச‌மாக‌ மாட்டிய‌துதான் த‌மிழ்ம‌ண‌த்தின் க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறாக‌ இருக்கிற‌து.


//கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய வீழ்ச்சியை கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் சந்தித்தார்கள். அது பற்றி "கலைஞருக்கு பாரத ரத்னா" என்ற பதிவில் சுட்டியிருந்தேன்.

திராவிட முன்னேற்ற கழகமும், பெரியாரிய சிந்தனைகளும், அன்றைக்கு பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு சிந்தனைகளுக்கும், காங்கிரஸ் சிந்தனைகளுக்கும் மாற்றாக வந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் எழுச்சியாக வந்தது.//

இப்படியாக ஆரம்பித்து தனது அபத்தங்களை அள்ளித்தெளித்திருக்கிறார் தமிழ்மணி, திராவிட‌ இய‌க்க‌ங்க‌ள் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளை ஒழித்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌வே உருவாக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து போல‌ எழுதியிருக்கிறார், அத‌ற்கு பின்பு வழ‌க்க‌ம் போல‌ க‌ம்யூனிச எதிர்ப்பு ஜ‌ல்லி, இடையே பா.ஜ‌.க‌ ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை கொண்ட‌ இயக்க‌ம் என்ற‌ ப‌ச்சை புளுகு வேறு.,

சரி, அவரது வ‌ழ‌க்க‌மான‌ க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஜ‌ல்லிக‌ளை புற‌ந்த‌ள்ளிவிட்டு, ம‌ற்ற‌ விச‌ய‌ங்க‌ளின் மீது ம‌ட்டும் க‌வ‌ன‌ம் செலுத்துவோம், த‌மிழ்ம‌ணி கூறுகிறார் அன்று பிர‌ப‌ல‌மாக‌ இருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளுக்கு, பெரியாரிய‌ இய‌க்க‌மும், தி.மு.க‌வும் மாற்றாக‌ இருந்த‌தாம் இது எவ்வ‌ள‌வு பெரிய‌ அப‌த்த‌ம். க‌ம்யூனிஸ கொள்கை த‌மிழ‌க‌த்தில் பிர‌ப‌ல‌மான‌த‌ற்கு காரண‌மே த‌ந்தை பெரியார்தான்,

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்து தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்டவர் தந்தை பெரியார், பகத்சிங்கை வெள்ளை அரசாங்கம் தூக்கிலிட்ட பொழுது, தேசபக்தர்கள் என்று தம்மை கூறிக்கொண்டவர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கி அதனை கண்டிக்க தயங்கிய நேரத்தில், பகத்சிங் ஒரு பொதுவுடைமைவாதி என்ற காரணத்துக்காகவே தனது குடியரசு பத்திரிக்கையில் ஆதரித்து எழுதியதோடு வெள்ளை அரசாஙக்த்தை கண்டிக்கவும் செய்தார் அய்யா பெரியார்(ஆதாரம்: "நான் நாத்திகன் ஏன்" புத்தகத்தின் பின்னிணைப்பு).,

தனது இறுதி மூச்சுவரை தந்தை பெரியார் கம்யூனிச கொள்கைகளின் மீது ஈர்ப்பு கொண்டவராகவே இருந்தார், அதற்கு எவ்வளவோ ஆதாரங்களை காட்டமுடியும், அவர் கம்யூனிஸ்ட்களோடு கொண்டிருந்த முரண்பாடு என்பது நடைமுறையை அடிப்படையாக கொண்டது, பிறவி இழிவுக்கு எதிராக‌ ஒரு சமுதாய புரட்சிக்காக போராடாமல், ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிப்பதாலோ அரசியல் புரட்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதாலோ எதுவும் நடந்துவிடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாக இருந்தது ஆனால் இறுதிமூச்சுவரை அவர் கம்யூனிச கொள்கைகளை என்றுமே எதிர்த்ததில்லை.,

இரசியா போய் அங்கு கம்யூனிஸ்ட்களால் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சியையும், அங்கு நிலவும் சமத்துவ உறவினையும் கண்டுவந்த பெரியார் கம்யூனிசத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், அதற்கு பின்பு அவர் பேசிவந்த மேடைகளில் தீவிர பொதுவுடைமை வாடை வீசியது, இதற்காக அவரை வெள்ளை அரசாங்கம் தண்டிக்க முற்பட்டது. இது பற்றி ஒரு கூட்ட‌த்தில் அவ‌ர் பேசும் பொழுது இப்ப‌டி குறிப்பிட்டார்

"நான் இர‌சியாவுக்கு போவ‌த‌ற்கு முன்பே, பொதுவுடைமைத் த‌த்துவ‌த்தை சுய‌ம‌ரியாதை இய‌க்க‌த்துட‌ன் க‌ல‌ந்து பேசிவ‌ந்த‌து உண்மைதான், ர‌சியாவில் இருந்து வ‌ந்த‌வுட‌ன் அதை இன்னும் தீவிர‌மாக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌தும் உண்மைதான்."

(23.3.1936 பட்டூக்கோட்டையில் பேசியது)

பிறவி இழிவை ஒழிக்கும் சமூக புரட்சிக்கென பெரியார் செயலாற்றினாலும் கூட‌பொதுவுடைமைக் கொள்கை மீதான‌தனது பற்றையும், பிரச்சாராத்தையும் அவர் எப்பொழுதுமே விட்டுவிடவில்லை, இதன் காரணமாகத்தான், அவர் நடத்திவந்த விடுதலை பத்திரிக்கை, ரசிய புரட்சியின் 50வது ஆண்டு மலரை 1966ல் கொண்டுவந்தது. அதில் எழுதிய‌ த‌ந்தை பெரியார் இப்ப‌டி எழுதினார்.

"இந்நாடு க‌ம்யூனிச‌ நாடாவ‌தே என் விருப்ப‌ம். சோச‌லிச‌ம்,
க‌ம்யூனிச‌ம்,ச‌ம‌த‌ர்ம‌ம் ப‌ர‌வுவ‌த‌ற்காக‌ என்று இர‌சியாவே இங்கு வ‌ந்தாலும் நான் வ‌ர‌வேற்பேன்"

(9.2.1966 விடுத‌லை)

மேற்க‌ண்ட‌ அவ‌ருடைய‌ வாக்கிய‌ம் அவ‌ர் க‌ம்யூனிச‌த்தின் மீது எந்த‌ அள‌வுக்கு ஈர்ப்பு கொண்டிருந்தார் என்ப‌தை நிரூபிக்கிற‌த‌ல்ல‌வா? முத‌லாளித்துவ‌மும் த‌னிம‌னித‌ சொத்துரிமையும் ஒழிய‌ வேண்டுமென்று பெரியார் எழுதியதை பாருங்க‌ள்

"என‌வே, த‌னிம‌னித‌ சொத்துரிமை ஒழிய‌ வேண்டும்,பிற‌ர் உழைப்பில் ப‌டோடோப‌ வாழ்க்கை ந‌ட‌த்துவ‌தும், அதிக‌ப‌டியான‌ பொருள்க‌ளூக்கு அதிப‌தியாய் இருப்ப‌தும் பெருமையான‌ வாழ்க்கை என்று க‌ருதுகிற‌ மூட‌ந‌ம்பிக்கை ஒழிய‌ வேண்டும், இதில் க‌வுர‌வமும், மரியாதையும் இல்லை என்ப‌து தெளிவாக்க‌ப்ப‌ட‌வேண்டும்"

இப்ப‌டி பேசிய‌ பெரியாரைத்தான் க‌ம்யூனிச‌த்திற்கு எதிராக‌வே க‌ட்சி தொட‌ங்கி முத‌லாளிக‌ளுக்கு சேவை செய்த‌து போல‌ புளுகுகிறார் த‌மிழ்மணி.,

பெரியார், புக‌ழ்பெற்ற‌ அவ‌ர‌து இறுதிப் பேருரையிலே பேசிய‌ சொற்கள் அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. க‌ம்யூனிச‌ கொள்கை என்ப‌து அனைத்து வ‌கை ஏற்ற‌த்தாழ்வுக‌ளுக்கும் எதிரான‌து, அது சாதிய‌ இழிவையும் க‌ண்டிக்க‌ வேண்டும் என்று உண‌ர்ந்திருந்த‌ த‌ந்தை பெரியார், அத‌னை செய்யாத‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் மீது த‌ன‌து வெறுப்பை வெளிப்ப‌டுத்துகிறார்

"இந்த‌க் க‌ம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வ‌ந்துவிட்டான் என்றால், அவ‌ன் காசுக்கு என்றால் என்ன‌ வேணும்னாலும் ப‌ண்ணுவானே, அவன‌ல்ல‌வா ச‌த்த‌ம் போட‌ வேண்டும் என‌க்கு ப‌திலாக‌? எங்க‌ளை த‌விர‌ நாதியில்லை இந்த‌ நாட்டில்"(19.12.1973)

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக
இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

(27.4.1953 அன்று, மன்னார்குடி வல்லூரில் ஆற்றிய உரை.)

பெரியார் பார்ப்பன கட்சிகளாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் எதிர்த்தாரே ஒழிய கம்யூனிச கொள்கைக‌ளை எதிர்க்க‌வில்லையென்ப‌த‌ற்கு இப்படி நாம் பல ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும்., ஆனால் த‌மிழ்ம‌ணி என்கிற‌ 'பார்ப்ப‌ன‌'ம‌ணி எந்த‌ ஆதாமும் இல்லாம‌ல் பிர‌ப‌ல‌மாக இருந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கு மாற்றாக‌ பெரியாரிய‌ம் வ‌ந்த‌து என்று கூறுகிறார், ஆனால் உண்மையில் க‌ம்யூனிச‌த்தை இந்த‌ நாட்டில் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தியதே த‌ந்தை பெரியார்தான்.,

உண்மைகள் இப்படி இருக்கும் பொழுது தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்கேற்ப பெரியாரிய கொள்கைகளை கம்யூனிசத்திற்கு எதிராக நிறுத்துகிறார். தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி.

இப்படி அவர் நிறுத்துவதன் நோக்கம் என்ன என்பதை நாம் சொல்லுவதை காட்டிலும், அவரது இந்துத்துவ சகலப்பாடியான கால்கரி சிவா இட்டிருக்கும் பின்னூட்டத்திலிருந்து எடுத்துக்காட்டுவது இங்கு சிறப்பாக இருக்கும்

கால்கரி சிவா said...
எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்?

ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா?

சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்.(பதிவு இங்கே)

த‌மிழ்ம‌ணியின் நோக்க‌த்தை, அவ‌ரது வெற்றியை பாராட்டும்வித‌மாக‌ கால்கரி சிவா அவ‌ர‌து பின்னூட்ட‌த்தில் இப்ப‌டி குறிப்பிட்டிருக்கிறார்.

//நக்ஸ்லைட்டுகளால் எந்த தொழில் முன்னேற்றம் இல்லையோ அதே தொழில் முன்னேற்றத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடையும்போது அதனை கெடுக்கும் வேலையையும், அந்த தொழிற்துறையால் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கும் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து தன்னை வளர்ப்பதையும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் செய்து வருகின்றன.//

முற்போக்காளர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்க துடிக்கும் தமிழ்மணியின் கட்டுரை, இப்படி இராம‌கோபாலய்ய‌ர் பிராண்டு நக்ஸலைட்டு பூச்சாண்டி காட்டியபடி தொடர்கிறது.

இப்ப‌டியாக‌ தொடர்ந்து கொண்டே போகும் த‌மிழ்ம‌ணியின் அப‌த்த‌ங்க‌ள், அத்த‌னைக்கும் நாம் ப‌தில‌ளிக்க‌ இற‌ங்கினால் நாளை நம்மால் ப‌திவு போட‌ முடியாது ஏனென்றால் த‌லை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சுற்றி பைத்திய‌ம் பிடித்துவிடும்.,

இத‌ற்கெல்லாம் ப‌திலளித்து த‌மிழ்ம‌ணியை நாம் அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌தை காட்டிலும், ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியன் ஒருவன் திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பை கக்கி தமிழ்மணியின் தளத்தில் போட்டிருந்த பின்னூட்டங்களை பற்றியும், அதனை அவர் எந்த ட்சேபனையும் இல்லாமல் பதிவாக எடுத்துப் போட்டு அவனை ஊக்கப்படுத்தியது பற்றியும் இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவில் விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறேன், இந்த பதிவிலேயே தமிழ்மணி வெளியிட்டிருக்கும் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். இதெற்கெல்லாம் அவ‌ர் என்ன‌ ப‌தில‌ளிக்கிறார் என்ப‌தை கேட்டாலே போதுமான‌து, ஒரு மிகச்சிற‌ந்த‌ குட்டிக்க‌ர‌ண‌ காட்சியை நாம் காண‌ முடியும்., அல்ல‌து க‌ம்யூனிச‌ ச‌தி என்ற‌ அல‌ற‌லை கேட்க‌ முடியும்.,

தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணியின் இரண்டாம் வருகை: வருக வருக என வரவேற்கிறேன்...

தமிழ்மணி என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராகவும், முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கோடும் பார்ப்பனமணி கும்பல் எழுதிவந்ததும் அதற்கு எதிராக சம்பூகனில் பல பதிவுகள் எழுதப்பட்டு தமிழ்மணி கும்பலுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் பலரும் அறிந்த விசயங்கள்தான், நாம் கேட்ட எந்த கேள்விக்கும் வாயே திறக்காத பார்ப்பனமணி கும்பல் திடீரென ஒருநாள் காணமல் போனது... பதிலளிக்கப்படாத நம்முடைய கேள்விகள் நிராதரவாய் நிற்கிறதே என்று நானும் வருந்திக் கொண்டிருந்தேன்.. அந்த வருத்தங்களை போக்கும் வகையில் மீண்டும் பிரசண்ணமாகியிருக்கிறார் திருவாளர் தமிழ்மணி, உண்மையிலேயே எனது மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது, இந்த முறையாவது நம்முடைய கேள்விகளூக்கும், மறுப்புகளுக்கும் தமிழ்மணி தரப்பிலிருந்து விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன், அந்த நம்பிக்கையை மூடநம்பிக்கையாய் மாற்றிவிடாமல் தமிழ்மணியை நான் முன்னர் அம்பலப்படுத்தி எழுதிய பதிவுகளுக்கு மறுப்பு எழுதி உதவ வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு நினைவுபடுத்தும் வகையில் தமிழ்மணியை விமர்சித்து நம்மால் எழுதப்பட்ட பதிவின் சுட்டிகளையும் கீழே தருகிறேன்.

1. கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி
2. தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....
3. தமிழ்மணி’ கும்பலில் RSS இந்துமதவெறி பாசிசவாதிகள் - கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை.
4. கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...
5. முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்
6. ‘ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?
7. ஒரு பார்ப்ப‌ன‌ சொறிநாய்க்கு க‌லைஞ‌ர் மீது வ‌ந்த‌ திடீர் அபிமானம்!!
8. இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன?

இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன?

சாதிய‌ வ‌ர்ணாசிர‌ம‌ அடுக்கில் ம‌க்க‌ளை ஒருவர் மேல் ஒருவராக‌ க‌ட்ட‌மைத்து ஆக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுக்கக் கூடிய‌து 'பார்ப்ப‌னீயம்' என்னும் அருவெறுப்பான ஜனநாயக விரோத கொடுங்கோண்மை த‌த்துவ‌ம்.

இப்ப‌டிப்ப‌ட்ட ஜனநாயக விரோத‌ பார்ப்ப‌னீய‌ இந்துத்துவ‌ க‌ருத்துக்க‌ள் த‌மிழ்ம‌ணியின் த‌ள‌த்தில் விர‌விக் கிட‌ப்ப‌தைதான் சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பாக‌ எடுத்துக்காட்டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி வாய்கிழிய‌ பேசும் தமிழ்மணியின் இல‌ட்ச‌ண‌த்தை நாம் திரைகிழித்துக்காட்டினோம், அதை ப‌ற்றி இதுவரை எதுவும் பேசாமல‌ க‌முக்க‌மாக‌ இருந்து வரும் த‌மிழ்மணி த‌ற்பொழுது ஒரு ப‌திவை போட்டிருக்கிறார். அதில், தலித் மக்களும் வன்னியர் சாதியினரும் மோதிக் கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் விரும்புவதாகவும் அதற்கு எதிராக தான் "த‌லித் வ‌ன்னிய‌ர்" ஒற்றுமையை வ‌லியுறுத்துவதாகவும் ஒரு ச‌மாதான‌ தூதுவ‌ன் போல‌ புது 'கெட்டெப்'பை போட்டிருக்கிறார் தமிழ்மணி.,

"சிதம்பரம், ஸ்டாலின், மருத்துவர் அய்யா, தொல் திருமாவளவன், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரும் சிறந்த மக்கள் தலைவர்களே". என்ப‌தான‌ காமெடியும் வ‌க்கிர‌மும் க‌ல‌ந்த‌ ந‌ம் காதில் பூ சுற்றும் க‌ருத்துக்க‌ள‌ட‌ங்கிய‌ அப்ப‌திவு, எப்போதும் போல த‌மிழ்ம‌ணியின் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ முக‌த்தை தெளிவாக‌வே வெளிக்காட்டுகிற‌து.

//கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் ஒரே வளங்களுக்கு போராடுபவர்கள் என்பதாலும், வன்னியர்களது பொருளாதார நிலைமைக்கும் தாழ்த்தப்பட்டவர்களது பொருளாதார நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லையென்றாலும், வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று பரவாயில்லை என்ற நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதும் உண்மை.//

இப்ப‌டி எழுதியிருக்கிறார் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளும் வ‌ன்னிய‌ர்க‌ளும் ஒரே வ‌ள‌ங்க‌ளுக்காக‌ 'போராடுகிறார்க‌ளாம்', இருவருமே 'போராடுகிறார்கள்', அதுவும் எத‌ற்காக? ஊரில் இருக்கும் ஒரே வ‌ள‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்காக‌, த‌லித் சாதியை சேர்ந்த‌ இளைஞனான‌ முருகேச‌ன், க‌ண்ண‌கி என்ற‌ வ‌ன்னிய‌ர் சாதி பெண்ணை காத‌லித்த‌ குற்ற‌த்திற்காக‌ இருவ‌ரையும் எரித்து கொன்ற‌தோடு முருகேச‌னின் வீடு வாச‌லை அடித்து நொறுக்கி சூறையாடினார்க‌ளே, அதுதான் ஒரே வளத்தை பகிர்ந்து கொள்வதற்கான 'போராட்டமா'?, இதோ இப்போது சால‌ர‌ப்ப‌ட்டியில், த‌லித்துக‌ளுக்கு த‌னிக்குவ‌ளையில் தேநீர் த‌ருவ‌தை எதிர்த்து போராடிய‌த‌ற்காக ஆதிக்க‌ தேவர் சாதி வெறிய‌ர்க‌ளால் தாக்க‌ப்ப‌ட்டு உயிருக்கும் உடைமைக்கும் உத்திர‌வாத‌ம் இல்லாம‌ல் ஊரை விட்டு வெளியேறியிருக்கிறார்க‌ளே "அது ஒரே வ‌ளத்துக்கான 'போராட்ட‌மா'",
த‌ங்க‌ளுக்கு த‌னிக்குவ‌ளை வைக்க‌க்கூடாது என்று த‌லித் ம‌க்க‌ள் போராடுவதும், அவ‌னுக்கு த‌னிக்குவ‌ளையில்தான் தேநீர் த‌ர‌வேண்டும் என்று ஆதிக்க‌ சாதியினரும் சண்டித்தனம் செய்வதும் "ஓரே வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான 'போராட்டம்'" என்கிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி, "ஈன‌ ஜாதி ப‌ற‌ப்ப‌ய‌லுக்கு ப‌ஞ்சாய‌த்து த‌லைவ‌ர் ப‌த‌வியா" என்று ஆறு பேரின் க‌ழுத்தை அறுத்து கூறு போட்ட‌ன‌ரே ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் அது "வ‌ள‌த்தை ப‌கிர்ந்து கொள்வ‌த‌ற்கான‌ 'போராட்டம்' என்கிறார் இந்த தமிழ்மணி ஆதிக்க சாதியினரான வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவதும் 'போராட்ட‌மாம்', அதற்கு எதிராக‌ தாழ்த்த‌ப‌ட்ட‌ ம‌க்க‌ள் ந‌ட‌த்துவ‌தும் 'போராட்ட‌மாம்' கூறுகிறார் இந்த‌ பார்ப்ப‌ன‌ம‌ணி.
இந்த மோசடித்தனமான கருத்தை வைத்துக்கொண்டுதான் ஜனநாயக பஜனை பாடக் கிளம்பியிருக்கிறது தமிழ்மணி கும்பல். ஒருவேளை இப்படி உரிமைக்காக போராடுவதையும், உரிமையை மறுத்து ஒடுக்குவதையும் ஒன்றாக 'ஒரே' செயல் போன்று பார்ப்பதுதான் ஜனநாயகம் என்று சொல்லவருகிறாரா தமிழ்மணி.

//பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குபவர்களாக வன்னியர்கள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.
ஆனால், திருமாவளவனும் பாமகவும் கொண்ட ஒரு வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி, அப்படிப்பட்ட போட்டிகளை குறைத்து அதன்மூலம் வரும் வன்முறையை குறைத்து ஒரு கூட்டணியை கிராம அளவில் ஏற்படுத்த முயன்று வருகிறது
.//

அதே ச‌ம‌ய‌த்தில் வ‌ன்னிய‌ர்க‌ள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஒடுக்கிறார்க‌ள் என்ப‌தும் உண்மையாம், வ‌ரலாற்று முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ "திருமா இராம‌தாசின்" கூட்ட‌னிக்கு பிறகு வ‌ன்முறையை குறைக்க‌ முய‌ல்கிறார்க‌ளாம்.

இந்த "வ‌ர‌லாற்று முக்கியத்துவமான‌ கூட்ட‌னி" வ‌ன்முறையை எப்ப‌டி குறைக்கிறார்க‌ள் என்ப‌தற்கு மிக‌ச் சிற‌ந்த‌ உதார‌ண‌ம்தான் "க‌ண்ணகி-முருகேச‌ன் காத‌ல் ச‌ம்ப‌வம்", க‌ட‌லூர் மாவ‌ட்ட‌ம் புதுக்கூரைப்பேட்டை கிராம‌த்தை சேர்ந்த‌வ‌ர் முருகேச‌ன், பொறியிய‌ல் ப‌ட்ட‌ ப‌டிப்பு முடித்த‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட சாதியைச் சேர்ந்த‌ இளைஞ‌ர், அதே ஊரின் ஊராட்சி ம‌ன்ற‌ த‌லைவ‌ரின் ம‌க‌ள் க‌ண்ணகி வன்னிய சாதியை சேர்ந்தவர், இவ‌ர்க‌ள் இருவ‌ரும் சாதி மீறி காத‌லித்த‌ கார‌ண‌த்தால் க‌ண்ண‌கியின் த‌ந்தையான‌ துரைசாமியும், அவ‌ர‌து அண்ண‌ன் மருதுபாண்டியனும் ம‌ற்றும் சில‌ரும் முருகேச‌னையும் அவ‌ர‌து த‌ந்தையையும், சித்த‌ப்பாவையும் ஊருக்கு வெளியே இருக்கும் முந்திரிக்காட்டுக்கு க‌ட‌த்திச் சென்ற‌ன‌ர் அங்கே கைக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தையின் க‌ண் முன்னாலேயே முருகேசன் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ விஷ‌ம் கொடுத்து ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார், அத‌னை பார்த்து க‌த‌றிய‌ழுத‌ க‌ண்ணகிக்கும் சாதி பெருமையை குலைத்த‌ குற்றத்திற்காக க‌ட்டாய‌மாக‌ விஷ‌மூற்ற‌ முய‌ன்ற‌ன‌ர் சாதிவெறிய‌ர்க‌ள் அவ‌ர் ம‌றுக்க‌வே அவ‌ர் காதிலும் மூக்கிலும் விஷ‌த்தை‌ ஊற்றி சாக‌டித்துவிட்டு, இறுதியாக‌ இருவ‌ரையும் எரித்து சாம்ப‌லாக்கிவிட்ட‌ன‌ர்,.

இது ந‌ட‌ந்த‌து, 8.7.2003ல், சாதி வெறிபிடித்த‌ ம‌னித‌த‌ன்மைய‌ற்ற‌ இந்த‌ ப‌டுகொலையை கேள்விப்ப‌ட்ட‌ திருமாவள‌வ‌ன் முருகேச‌ன் த‌ந்தை சாமிக்கண்ணுவை தொலைபேசியில் தொட‌ர்பு கொண்டு ஆறுத‌ல் தெரிவித்த‌தோடு, அவ‌ரை சென்னைக்கு அழைத்து வ‌ந்து ப‌த்திரிக்கையாள‌ர் ச‌ந்திப்பை ந‌ட‌த்தி இந்த‌ கொடும் நிக‌ழ்வை வெளி உல‌குக்கு தெரிய‌ச் செய்தார்.

இருப்பினும் கூட‌ இந்த‌ 'ஜ‌ன‌நாய‌க‌' நாட்டின் காவ‌ல்துறை வ‌ன்னிய‌ர் சாதி வெறிய‌ர்க‌ளுக்கு ஆதரவாகவே‌ செய‌ல்ப‌ட்டுவ‌ந்த‌து, முருகேச‌னை த‌லித்துக‌ளே கொலை செய்துவிட்ட‌தாக‌ வ‌ழ‌க்கு ப‌திந்த‌ காவ‌ல்துறை, பிள்ளையை பறிகொடுத்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருந்த‌ முருகேச‌னின் த‌ந்தைக்கு கொலைகார‌ ப‌ட்ட‌த்தையும் கொடுத்த‌து. இத‌னை அறிந்த‌ சென்னை உய‌ர்நீதி ம‌ன்ற‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ர் இரத்தின‌ம்(மேல‌வ‌ள‌வு வ‌ழ‌க்கை ந‌ட‌த்திய‌வ‌ர்) இந்த‌ வ‌ழ‌க்கை சி.பி.ஐ விசாரிக்க‌ வேண்டும் என்று ம‌னுதாக்க‌ல் செய்தார்.

இந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளினிடையேதான் "த‌மிழ் பாதுகாப்பு இய‌க்க‌ம்" என்ற‌ பெய‌ரில் திருமாவும் இராம‌தாசும் இணைந்த 'வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' 2005ல் அமைந்த‌து. இத‌ன் பிற‌கு திருமாவின் போக்கில் மாற்ற‌மேற்ப‌ட்ட‌து.

முருகேச‌னின் சித்தாப்பாவிற்கு தொலைபேசி செய்த‌ திருமா "கேஸ் அது இதுன்னு விசயத்தைப் பெருசு பண்ணாதீங்க. படையாச்சிங்க ரொம்பக் கோவமா இருக்காங்க. நாளைக்கு அவங்களுக்கு எதிரா எதாச்சும் தீர்ப்பாயிட்டா அது காலத்துக்கும் பகையாயிரும்" என்று ச‌மாதான‌ம் பேசினார். மேலும் "அன்புமணி மூலமா பிரசர் வருது. நீங்கதான் பக்குவமா முடிவெடுக்கணும்" என்று கூறி 'வரலாற்று சிறப்புமிக்க கூட்டனியின்' இரகசியத்தையும் விளங்கவைத்தார் திருமாவளவன்.

ஆனால் இராம‌தாசு எப்ப‌டி ந‌ட‌ந்து கொண்டார்? இதோ கூறுகிற‌து த‌லித் முர‌சு..

//பாட்டாளி மக்கள் கட்சியும் அதன் தலைவர் மருத்துவர் ராமதாசும் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காக மாபெரும் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். மறுபுறம் சாதி மறுத்து காதலித்த தலித் இளைஞரை கொலை செய்த வன்னியர்களுக்கு அடைக்கலமும் அரவணைப்பும் தருகின்றனர்.//

எவ்வ‌ள‌வு 'வ‌ர‌லாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னி' இந்த‌ வ‌ரலாற்று சிற‌ப்புமிக்க‌ கூட்ட‌னிக்குத்தான் வ‌க்கால‌த்து வாங்குகிறார் த‌மிழ்மணி.,

அதுவும் எதற்காக‌? சாதி ஒழிய‌ வேண்டும் என்கிற‌ அக்க‌றையினாலா? நிச்சயமாக இல்லை ஒரு பார்ப்பன வெறியன் சாதி ஒழிய வேண்டும் என்று நினைப்பானா என்ன? நமது அம்பலப்படுத்தல்களுக்கு பிறகு சரிந்து போன தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி, முற்போக்காளர்களை மோதவிடும் தனது திட்டத்தில் தொடர்ந்து ஈடுபடத்தான் இப்படியொரு பதிவே தவிர வேறு எந்த சிறப்புக்காரணமும் இல்லை."அய்யங்கார் என்று சொல்லிக்கொள்வ‌த‌ற்கு என‌க்கு உரிமையில்லையா?" என்று இணைய‌த்தில் அங்க‌லாய்க்கிறார்க‌ளே ந‌ங்க‌ந‌ல்லூர் நாம‌க‌ட்டிக‌ள், அது போன்ற பார்ப்பன கொழுப்பை வடிய வடிய காய்ச்சுவதற்கு கட்சி வேறுபாடுகளை கடந்து கைகோர்த்து நிற்கிறார்களே பார்ப்பன எதிர்ப்பாளர்கள் அவர்களை உடைத்து மோத‌விட்டு த‌ன‌து ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்வதற்காகத்தான் இப்படி அதிர்வேட்டுக்களை கொளுத்திக் கொண்டிருக்கிறார் பார்ப்பனமணி. அத‌ற்கென‌தான் பார்ப்ப‌ன‌ வெறி பிடித்த பாசிஸ்ட் ஜெய‌லலிதாவை கூட‌ ம‌க்க‌ள் த‌லைவ‌ர் என்று சொல்லி ஒரு க‌த‌ம்ப‌க்கூட்ட‌னியை க‌ட்டிய‌மைக்க‌ முய‌ல்கிறார் த‌மிழ்ம‌ணி.

மேலும் எழுதுகிறார் த‌மிழ்ம‌ணி..

//ஏன் ஒருவரை ஒடுக்குபவனாகவும் மற்றவரை ஒடுக்கப்படுகின்றனவராகவும் சித்தரிக்கின்றனர்?//

மேலே வ‌ன்னிய‌ர்க‌ள் ஒடுக்குவ‌து உண்மைதான் என்று எழுதிய‌ த‌மிழ்ம‌ணி நாம் அச‌ந்துவிடும் நேர‌மாக‌ பார்த்து "ஒடுக்குப‌வ‌னாக‌வும், ஒடுக்கப்ப‌டுகிற‌வ‌னாக‌வும் சித்த‌ரிக்கின்ற‌னர்" என்று எழுதுகிறார், அதாவது தலித் ம‌க்க‌ள் உண்மையில் ஒடுக்கப்படவில்லை கம்யூனிஸ்ட்கள்தான் அவர்கள் ஒடுக்கப்படுவதாக சித்த‌ரிக்கிறார்கள் என்று கூறுகிறார் பார்ப்பனமணி. எவ்வ‌ள‌வு வ‌க்கிர‌ம் பிடித்த‌ க‌ருத்து இது என்று நான் உங்க‌ளுக்கு சொல்லித் தெரிய‌ வேண்டிய‌தில்லை. இந்த பார்ப்பனமணிக்கு இன்னும் கொஞ்சம் இடம் கொடுத்தால் 'பார்ப்பன ஆதிக்கம்' இருப்பதாக சித்தரிக்கின்றனர் என்று கூட சொல்வார். இதனை அவருக்கு நாம் கேள்வியாக கூட எழுப்பலாம், தமிழ்மணி கூறட்டுமே இந்தியாவில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கிறதா இல்லையா, அதனை எப்படி எதிர்கொள்வது என்று, அவரை புரிந்து கொள்வதற்கு நமக்கு அது ஏதுவாக இருக்கும்.

இப்ப‌டி நீண்டு கொண்டு போகும் க‌ட்டுரையில் இந்த‌ நாட்டில் அமைதி த‌வ‌ழுவ‌தாக‌வும் ஜ‌ன‌நாய‌க‌ம் பூத்துக் குலுங்குவ‌தாக‌வும், அத‌னை குலைக்க‌ தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை ஆயுத‌ம் ஏந்த‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் தூண்டுவ‌தாக‌வும் "அமைதி குலைந்து விடுமென்று" பார்ப்ப‌ன‌ம‌ணி துடித்துப்போகிறார்.,

உண்மைதான் இன்று சால‌ர‌ப்ப‌ட்டி கிராம‌த்தில் கூட‌ அமைதிதான் நில‌விக்கொண்டிருக்கிற‌து, தாழ்த்த‌ப்ப‌ட்ட‌ ம‌க்களை அடித்துவிர‌ட்டிவிட்டு ஆதிக்க‌ சாதி வெறிய‌ர்க‌ள் தான் ம‌ட்டும் த‌னியே அனுப‌விக்கும் அமைதி... இந்த‌ அமைதியைத்தான் விரும்புகிறார் போலும் த‌மிழ்ம‌ணி, எம‌து ம‌க்க‌ளை ஊருக்கு வெளியில் விர‌ட்டி சேரியில் அடைத்த‌ பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறிய‌ன் வேறு எதை விரும்புவான்.

இந்த பதிவின் பின்னிணைப்பாக, அமைதி, அஹிம்சை தவழும் இந்த ஜனநாயக நாட்டின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் மேலவளவு கொலை பற்றிய, தலித் முரசுவின் நீண்ட செய்தி கட்டுரையை கீழே இணைத்திருக்கிறேன்.

அதன் முன்னுரை மட்டும் கீழே இருக்கிறது, கட்டுரையை இணைப்பில் சென்று படிக்கவும்!!

ஜாதி இந்துக்கள் எறும்புக்குக்கூட தீங்கிழைக்காதவர்கள்; தாங்கள் போடும் கோலங்கள்கூட எறும்புகளுக்குத் தீனியாக வேண்டும் என்று நினைப்பவர்கள்; தாங்கள் சாப்பிடுவதற்கு முன்னால் காகத்திற்கு சோறு ஊட்டிவிட்டே சாப்பிடுவார்கள்'' "இந்து இந்தியா'வின் புகழ் இவ்வாறு வெளியுலகில் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், "காந்தி தேச'த்தில் தீண்டத்தகாத மக்களின் உண்மை நிலை என்ன என்பதற்கு ஒரு சான்றுதான் மேலவளவு படுகொலை.

ஆம், இனவெறி இந்தியாவின் "அகிம்சை' முகம் இது!படுகொலை செய்யப்பட்ட ஆறு பேரையும் எந்தளவுக்கு சாதி இந்துக்கள் மூர்க்கத்தனமாக வெட்டிக் கொன்றனர் என்பதை, இச்சமூகத்திற்கு உணர்த்துவதற்காகத்தான் நீதிமன்றத் தீர்ப்புரைகளை (முருகேசன் வெட்டப்பட்டதை மட்டும்) அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.

'இந்து' நாட்டிற்கு ஆப்படித்த கம்யூனிஸ்ட்களை வருக வருக என வரவேற்கிறேன்.

"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" என்ற கதையாகிவிட்டது இந்துமதவெறியர்களின் நிலைமை, அவர்களது அகண்ட பாரத கனவினை அடிக்கடி கலைத்துக்கொண்டிருக்கும் காஷ்மீரையும், வடகிழக்கு மாகாணங்களையும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சதி, தூண்டுதல் என்று புளுகி வந்த இந்துமதவெறியர்கள், அமெரிகாவின் காலை பிடித்தாவது அகண்ட பாரதத்தை அமைத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள், இந்த நிலையில்தான் உலகின் ஒரே இந்து நாடு என்று சொல்லப்பட்ட நேபாளத்திற்கு ஆப்பு அடித்திருக்கிறார்கள் அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்கள்.

காஞ்சிமடத்து காமக்கேடி ஜெயேந்திரன் தனது கையில் வைத்திருக்கும் தண்டத்தை போட்டுவிட்டு ஒரு தமிழ் நடிகையை தள்ளிக் கொண்டு போய் உல்லாசமாய் இருக்கவும், சங்கர்ராமன் என்ற பார்ப்பனரை போட்டுத்தள்ளிவிட்டு போய் பதுங்கிக் கொள்ளவும் தனது பாதுகாப்புக்கு உகந்ததாக‌ அவன் தேர்ந்தெடுத்த இடம் இந்து நாடான‌ நேபாளம், அந்த நாட்டு மன்னனின் வீட்டு விழாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆரிய இந்துமத வெறியர்கள் சென்றுவருவது கூட வாடிக்கையான ஒரு நிகழ்வு. அந்த அளவுக்கு மோசடி பேர்வழிகளுக்கும், கிரிமினல்களுக்கும் சொர்க்கபுரியாய் அமைந்திருந்தது நேபாளம்.,

மூச்சுக்கு முந்நூறு தடவை "இந்து நாடு" என்று ஆரிய வெறியர்கள் இறுமாந்திருந்த‌ நேபாளத்தை மதசார்ப்பற்ற குடியரசாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடிய மாவோயிஸ்ட்கள் அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள், இனி அந்த நாடு இந்து நாடாக நிலைத்திருக்க முடியாது என்ற நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது முன்பே கூறியது போல “உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா” என்ற கதையாகிவிட்டது, இந்து ராஷ்டிர கனவு கண்டு வந்த கும்பலின் நிலை.,

இனி இங்கு ஏதாவது சில்மிஷ வேலை செய்து விட்டு ஜெயேந்திரன் நேபாளத்திற்கு ஓடினால் எப்போதும அவர் அப்படி செய்யமுடியாதபடி இனி ஒட்ட ‘நறுக்கி’விடுவார்கள் அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்கள், பார்ப்பன பாம்புகளின் நிலை அங்கு பல்லை பிடுங்கிய கதைதான், அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்ன் மாணவர் அமைப்பான ABVP "இந்திய நேபாள எல்லை பிரச்சணை" "தேசத்திற்கு ஆபத்து" என்றெல்லாம் சரடுவிட துவங்கியிருக்கிறது. கம்யூனிஸ்ட்களின் இந்த வெற்றி இந்துமதவெறியர்களின் அடிவயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட வெற்றியினை ஈட்டியிருக்கும் நேபாள கம்யூனிஸ்ட்களை ஒழித்துக்கட்டுவதற்கு இந்(து)தியாவும், அமெரிக்காவும் பல்வேறு திரைமறைவு வேலைகளையும், சதி திட்டங்களையும் தீட்டிவருகிறார்களாம் இந்த நிலையில் மன்னராட்சி மற்றும் இந்து கொடுங்கோன்மை அரசுக்கு எதிராக போராடும் அம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பின் தலைமையில் இந்திய நேபாள மக்கள் ஒற்றுமை அரங்கம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்று உரையாற்ற இருப்பதாகவும் இணையத்திலிருக்கும் தோழர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

கூட்ட‌த்தின் அழைப்பிதழையும் கூட‌ இணைய‌த்தில் போட்டிருக்கின்ற‌ன‌ர், அத‌ன் மூல‌மாக‌ அந்த‌ மேடையில் தொல்.திருமாவ‌ள‌வ‌ன், சுப‌.வீர‌பாண்டிய‌ன், தியாகு போன்ற‌ த‌லைவ‌ர்கள் உரையாற்றுவதும் தெரிய‌வ‌ருகிற‌து. மன்னராட்சி இந்து கொடுங்கோண்மை ந‌ட‌ந்து வ‌ந்த‌ நேபாள‌த்தில் ஜ‌ன‌நாய‌க‌ ஆட்சி ம‌ல‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ இந்த த‌லைவ‌ர்க‌ள் க‌ரம் சேர்த்து உர‌த்து குர‌ல் எழுப்புவ‌து உண்மையிலேயே வ‌ர‌வேற்க‌ த‌க்க‌தாகும்!!

இவ‌ர்க‌ளுக்கு என‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்கிறேன்!!

இப்ப‌டியொரு நிக‌ழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ க‌ழ‌க‌த்திற்கும் என‌து வாழ்த்துக்க‌ளை தெரிவித்துக்கொள்வ‌தோடு, இந்த‌ நிழ‌ச்சியில் ப‌ங்கேற்க‌ வ‌ருகை த‌ரும் இந்து ராஷ்டிர‌த்திற்கு ஆப்ப‌டித்த‌ நேப்பாள‌ க‌ம்யூனிச‌ தோழ‌ர்க‌ளையும் வ‌ருக‌ வ‌ருக‌ என‌ வ‌ர‌வேற்கிறேன்!!

எனக்கு மின்னஞ்சலில் அழைப்பிதழை அனுப்பி வைத்த தோழருக்கும் நன்றி!!

கூட்டத்தின் அழைப்பிதழ்.
நிகழ்ச்சி நிரல்.


குறிப்பு:
இனி தமிழ்மணி கும்பலுக்கு வேலை அதிகமாகிவிட்டது நேபாளத்தில் நிகழப்போகும் மனித உரிமை மீறல்கள் பற்றி கட்டுக்கட்டாக கதை எழுதிக்குவிக்க வேண்டும், இதுவரை எந்த வெள்ளைகாரனும் எழுதி வைக்காததாலும், விக்கிபீடியாவில் இது குறித்து எந்த செய்தியும் இல்லாததாலும் பாவம் தமிழ்மணி இதற்கு முழுக்க முழுக்க தமது கற்பனை வளத்தையே நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக‌ இதுவரை நான் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிக்காமல் கள்ள மெளனம் சாதித்துக்கொண்டு தனது வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிகளை கொட்டிவரும் தமிழ்மணி கும்பல் இந்த பதிவின் மூலமாக எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தங்களை மேலும் நியாயப்படுத்த நினைத்தால் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக ஒரு கேள்வி, பார்ப்பன தினமணி இந்த அழைப்பை வெளியிட்டிருக்கிறதே அது என்ன கம்யூனிச பத்திரிக்கையா? இல்லை அது வணிக நோக்கம் என்று தமிழ்மணி வாதாட கிளம்பினால் என்னுடைய வாதங்களை பிறகு வைக்கிறேன்.
இதனை நான் எதற்கு சொல்கிறேன் என்றால் தமிழ்மணி பதிவு என்கிற‌ பெயரில் மொக்கை போட்டு அந்த மொக்கைக்கு பதிலளிக்க நாம் ஒரு பதிவை போட்டு வாசகர்களை எரிச்சலடைய செய்யாமல் தவிர்ப்பதற்கே இதனை முன்பே இங்கு சொல்லிவைக்கிறேன்.

ஒரு பார்ப்ப‌ன‌ சொறிநாய்க்கு க‌லைஞ‌ர் மீது வ‌ந்த‌ திடீர் அபிமானம்!!

பெரியாரிய‌, திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கும், க‌ம்யூனிச‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும் இடையில் சிண்டு முடியும் நோக்கோடு இய‌ங்கி வ‌ந்த 'பார்ப்ப‌ன‌'ம‌ணி முழுமையாக‌ அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும், அவ‌ரை குற்ற‌ம்சாட்டி நாம் எழுப்பிய‌ கேள்விக‌ளுக்கு இதுவரை அவர் விள‌க்கமோ, ப‌திலோ அளிக்காம‌ல் க‌முக்க‌மாக‌ இருந்து வ‌ருவ‌தும் நீங்க‌ள் அனைவ‌ரும் அறிந்த‌துதான்.

'இவ‌ருக்கு கேள்வி, அவ‌ருக்கு கேள்வி' என்று விக்கிபீடியாவை கையில் வைத்துக்கொண்டு உல‌க‌ அறிஞ‌ர் போல மொக்கை போட்டுக் கொண்டிருந்தவர்தான் இந்த தமிழ்மணியாகிய திருவாளர் மொக்கைமணி மற்றவர்களையெல்லாம் கேள்வி கேட்டு சவடால் அடித்தவர் தன்னை பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாக கள்ள‌ மெளனம் சாதித்துக்கொண்டிருக்கிறார்., அதற்கு பின்பு மூன்று பதிவுகள் போட்டதோடு, நம்மிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறிவிட்டார் அதாவது அது ஒரு இந்துத்துவ கும்பல் என்று நாம் கூறியதை மெளனமாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.

இருப்பினும் "பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது" என்று கூறுவார்களே அது போல சதி செய்தே பழகிப்போன 'பார்ப்பன'மணியின் பார்ப்பன மூளை இப்பொழுது மீண்டும் கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது போல் பதிவு போட்டிருக்கிறது, அத்தோடு சம்பூகனிடமிருந்து கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான‌ ஆத்திரமான பதிவை எதிர்பார்க்கிறேன் என்றும் ஒரு பின்னூட்டத்திலும் அது கூறியிருக்கிற‌து.

ஆக‌ இதுதான் அவ‌ர‌து நோக்கம், அதாவ‌து க‌லைஞ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ பேச‌ வேண்டுமென்ப‌த‌ற்காக அவர் இப்ப‌திவை போட‌வில்லை, க‌லைஞ‌ரை விம‌ர்சிக்கும் க‌ம்யூனிஸ்ட்க‌ளை சுட்டிக்காட்டி "போய் அவனை தாக்கு" என்று திராவிட பதிவர்களை தூண்டிவிடுவது, இந்த விசயத்தில் மோதிக்கொள்ளூம் இருவரையும் நிரந்தர எதிரிகளாக மாற்றுவது, முற்போக்கு முகாமை பலவீனப்படுத்துவது இதுதான் 'பார்ப்பன'மணியின் நோக்கம். இதனை நான் சொல்வதைகாட்டிலும் தமிழ்மணியின் கொள்கைசால் நண்பரான‌ 'கால்கரி சிவா' கூறியதை இங்கு எடுத்துக்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

கால்கரி சிவா said...
எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக
திருப்பிவிட்டீர்கள்?
ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என
நினைக்கிறேன் சரியா?
சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்
.(பதிவு இங்கே)

"த‌லைவர் க‌லைஞர்" என்று எழுதும் த‌மிழ்ம‌ணியின் உள்ள‌க்கிட‌க்கையை இந்த‌ பின்னூட்ட‌ம் தெளிவுற‌ எடுத்துக்காட்டுகிற‌து. இத‌னை நான் முன்பே இந்த‌ ப‌திவில் எழுதியிருக்கிறேன்., இதுதான் தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன வெறிநாயின் திட்டம்.

நமது பதிவுகள் வருவதற்கு முன்பு நமது திராவிட தோழர்கள் கூட தமிழ்மணியை நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்மணி கலைஞரை ஆதரிப்பது போல் எழுதுவது அவரை கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக நிறுத்துவதற்குத்தான், என்று பார்ப்பன இந்துமதவெறி ஆதரவாளரான 'கால்கரி சிவாவுக்கு' தெரிந்திருப்பது எப்படி, என்பதுதான் என‌க்கு விய‌ப்பையும், ச‌ந்தேக‌த்தையும் கொடுக்கிற‌து., போத‌க்குறைக்கு இப்போது த‌மிழ்மணிக்கு பின்னூட்ட‌ம் பாலாவும் த‌ன‌து ஆத‌ர‌வை தெரிவித்திருக்கிறார், எப்ப‌டியோ 'இன‌ம் இன‌த்தோடு சேர்ந்தால் ச‌ரி'.

என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே எழுதும் கிறிஸ்தவ முக்காடு போட்ட இந்துத்துவ கும்பல்..

பார்ப்ப‌ன‌ இந்துத்துவ‌ கும்ப‌ல்க‌ள் முற்போக்காள‌ர்க‌ள், சிறுபாண்மைய‌ர்க‌ள் மத்தியில் மோத‌லை ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என்ற திட்ட‌மிட்ட‌ அணுகுமுறையோடு த‌மிழ்ம‌ண‌த்தில் நுழைந்திருக்கிற‌து, அத‌ற்கேற்ப‌ ப‌ல்வேறு பெய‌ர்க‌ளில் த‌ள‌ம் ஆர‌ம்பித்திருக்கும் அக்கும்ப‌ல் தொட‌ர்ந்து மோதலை ஏற்ப‌டுத்துகிற வகையில் பதிவிட்டு வருவதோடு, சிறுபாண்மைய‌ர் பெய‌ரில் பெரியாரை வ‌சைபாடுவது போன்ற‌ வேலைகளையும் செய்து வ‌ருகிற‌து, இந்த‌ ச‌திதிட்ட‌ம் ப‌ற்றி இத‌ற்கு முன்பே அனானிக‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், த‌மிழ்ம‌ணி என்று பெய‌ரிட்டுக்கொண்டு த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிராக‌ எழுதி வ‌ந்த ஒரு கும்பலை நானும் என‌து க‌ட‌ந்த‌ ப‌திவுக‌ளில் அம்பலப்படுத்தியிருக்கிறேன், இந்த‌ நிலையில் ஜ‌ன‌நாய‌க‌விரோத‌, ம‌னித‌ விரோத 'பார்ப்ப‌ன‌'ம‌ணிக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ற்றி பேசும் அருகதை கிடையாது என்று இன்று காலையில் நாம் ப‌திவிட்ட‌ அடுத்த‌ ஒரு ம‌ணி நேர‌த்திற்குள் த‌மிழ்ம‌ண‌த்தில் பெரியாரை வ‌சைபாடி ஒரு ப‌திவு வெளியானது.,

முஸ்லீம் என்ற‌ பெய‌ரில் கிறிஸ்த‌வ‌ த‌ள‌ம் ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டிக்கொள்ளும் ஒரு பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறி நாய் ஒன்று அதில் பெரியாரை ஒருமையில் எழுதியிருப்ப‌தோடு, தீண்டாமை ஒழிவ‌த‌ற்காக‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இஸ்லாமுக்கு மாற‌ச் சொன்ன‌ பெரியாரின் க‌ருத்துக்க‌ளை எடுத்துப் போட்டு அத‌னை முன்னுக்கு பின் முரணான‌து, பெண்ண‌டிமைத‌ன‌த்தை எதிர்த்த‌ பெரியார் இஸ்லாமுக்கு மாற‌ச் சொல்ல‌லாமா? என்ற‌வாறெல்லாம் கேள்வி எழுப்பியப‌டி பெரியாரின் மீதும், இஸ்லாத்தின் மீதும் த‌ன‌க்கிருக்கும் வெறுப்பை வெளிப்ப‌டுத்திக் கொண்டிருக்கிறது.,

1934ம் வ‌ருட‌த்தில் மதம் மாற‌ப்போவ‌தாக‌ அறிவித்து அம்பேத்க‌ர் பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌மும், சாதி இந்துக்க‌ளிட‌மும் பெரும் க‌ல‌க்க‌த்தை ஏற்ப‌டுத்தினார், அந்த‌ த‌ருண‌த்தில் அவ‌ரை முழுமையாக‌ ஆத‌ரித்த‌ த‌ந்தை பெரியார், த‌ன‌து குடிய‌ர‌சு இத‌ழில் எழுதிய‌ த‌லைய‌ங்க‌மான‌து கிறிஸ்த‌வ‌ முக்காடு போட்டிருக்கும் இந்துத்துவ‌ வெறிய‌ன் எழுப்பியிருக்கும் கேள்விக‌ளுக்கு ப‌தில‌ளிக்க கூடிய‌ வ‌கையில் அமைந்திருப்ப‌தால் அதிலிருக்கும் க‌ருத்துக்கள் சில‌வ‌ற்றை இங்கே ப‌திகிறேன். இனி பெரியார் எழுதுகிறார்...


வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம்.மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்;

நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்" என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்" என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.


நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்" என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும்,தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சிலமூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள்.அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம்சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்துவருகின்றது என்று தான் சொல்லுவோம்.

இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா?

ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.



(17.11.1935 "குடி அரசு' இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

‘ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?

தமிழ்மணி என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ கும்பல் பற்றி ஆதாரங்களோடு நாம் எழுதி வாரம் இரண்டாகிறது, தமிழ்மணி தரப்பிலிருந்து நம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை, தனது கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்யவில்லை என்றும் அதனால் தமிழில் தட்டச்சு செய்யமுடியவில்லை எனவே அடுத்த வாரம் மறுமொழி அளிக்கிறேன் என்று கூறியிருந்தார் தமிழ்மணி, காட்டமான மறுமொழி வருமென்று நானும் ஆவலோடு காத்திருந்தேன், இப்பொழுது தமிழ்மணியின் கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்கிறது, அவரும் நமக்கு பதில் சொல்லியிருக்கிறார் என்ன பதில் தெரியுமோ?

//சம்பூகனோடு எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் உண்மையிலேயே பெரியாரிஸ தொண்டராக இருந்தால், வாழ்த்துகிறேன். அவரது வழியில் அவர் சென்று கம்யூனிஸத்தை கண்டாலும் சரி, அல்லது பெட்டி பூர்ஷ்வாவாக ஆனாலும் சரி, அல்லது "தரகு முதலாளி(lol)" ஆக ஆனாலும் சரி. எனக்கு ஒன்றுமில்லை. அவர் முழுமையான கம்யூனிஸ்டாக ஆகி, அந்த கம்யூனிஸ பிரச்சாரத்தை அவர் செய்யும்போது அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.//

இதுதான் அவரது பதில், இப்படியொரு பதிலை தமிழில் தட்டச்சு செய்வதற்காகத்தான் இரண்டு வாரங்களாக காத்திருந்திருக்கிறார் தமிழ்மணி.,

என்னோடு அவருக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லையாம், நான் எனது உழைப்பு நேரத்தை செலவு செய்து, தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் இந்த பார்ப்பன மதவெறி கும்பல் பற்றியும், பெரியாரியவாதிகளையும், மார்க்சியவாதிகளையும் மோதவிடுவதற்கு இந்த கும்பல் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், இயல்பில் இந்த கும்பலுக்கு பெரியார் மீதும் அவரது அரசியல் மீதும் இருக்கும் வெறுப்பை பற்றியும் தகுந்த ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன், நான் இவ்வளவு குற்றச்சாட்டுகளை அடுக்கிவைத்து அவரிடம் கேள்வி எழுப்பினாலும் கூட அவர் என்னை பொருட்படுத்தமாட்டாராம், என்னோடு பேசுவதற்கு அவரிடம் ஒன்றுமில்லையாம், எவ்வளவு பெரிய ஜனநாயகவாதி பார்த்தீர்களா? தன்னை நோக்கி எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளுக்கு, அதுவும் “கிசுகிசுவாக” அல்ல, ஆதாரத்தோடு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல மறுக்கும் ஜனநாயகவாதிதான் இந்த தமிழ்மணி, என்னோடு பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று அவர் கூறுவதை நான் வேறு எப்படி எடுத்துக்கொள்வது, "ஆம், நான் ஒரு இந்துத்துவ பயங்கரவாத கும்பலை சேர்ந்தவன்தான்" என்று அவர் ஒத்துக்கொண்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்பதை அவர்தான் கூற வேண்டும்.

நான் பெரியாரிய தொண்டராக இருந்தால் என்னை வாழ்த்துகிறாராம், இவர் வாழ்த்திற்காக ஏங்கி கொண்டு நான் வரிசையில் நின்று கொண்டிருப்பது போல பேசுகிறார் இந்த தமிழ்மணிவாள்., உன்னை பார்ப்பன இந்துமதவெறியன் என்று நான் குற்றம்சாட்டியிருக்கிறேன், அதற்கான ஆதாரங்களை காட்டியிருக்கிறேன், அப்படியிருக்கும் பொழுது தனது கொள்கைகளை கூட மறைத்துக் கொண்டு எழுதுமளவுக்கு ஜனநாயக விரோத, மனித விரோத கொள்கையை கொண்டிருக்கும் உன்னிடம் எனக்கு உறவென்ன, வாழ்த்தென்ன?

என்னோடு இப்போதைக்கு விவாதிக்க மாட்டாராம் தமிழ்மணி, நான் என்று கம்யூனிஸ்டாக மாறுகிறேனோ அன்று வந்து என்னிடம் கம்யூனிசத்தை பற்றி விவாதிப்பாராம் அதாவது "அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பாவாக மாறும் பொழுது" இவர் பேசுவார் என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டும்(அப்பொழுதும் நமது கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டார், கம்யூனிசம் பற்றிதான் விவாதிப்பார்), தன்னை பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாத இந்த ஜனநாயகவிரோத ‘பார்ப்பன’மணிதான், ஜனநாயகத்திற்கு அத்தாரிட்டியாக தன்னை வரித்துக் கொண்டு கம்யூனிஸ்ட்களோடு விவாதிக்கிறாராம், மேல்நிலையில் இருக்கும் பார்ப்பன கும்பலின் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுவிடும் என்கிற பதட்டம்தான் தமிழ்மணியை ஆட்டிவைக்கிறதே ஒழிய அவருக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு மயிரளவு கூட மரியாதை கிடையாது என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது, பார்ப்பன பண்ணாடைக்கு ஜனநாயகத்தின் மீது என்ன மதிப்பு இருக்க முடியும்.

நம்முடைய கேள்விகளை தவிர்த்துவிட்டு கம்யூனிஸ்ட்களை சர்வாதிகாரிகளாக திட்ட கிளம்பியிருக்கும் தமிழ்மணி அந்த பதிவினிடையே இப்படி கூறுகிறார்,

//தற்போது பார்ப்பனீயத்தை தூக்கி பிடிக்கிறான்.. ஏதோ காரணம். காரணமா முக்கியம். கருத்து சொல்பவனின் வாயை மூடுவதுதான் முக்கியம்.//

அதாவது, இந்த தமிழ்மணி கும்பலின் வாயை அடைப்பதற்காக கம்யூனிஸ்ட்கள் அவரை பார்ப்பனன் என்று குற்றம்சாட்டுகிறார்களாம்., திருவாளர் தமிழ்மணி அவர்களே, உங்களது முகத்திரையை கிழித்து உங்கள் அருவெறுப்பான ஜனநாயக விரோத பார்ப்பன முகத்தை அம்பலப்படுத்தும் என்னை கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தி நீங்கள் எனது வாயை அடைக்க முயல்வது ஏன்?

மேலும் அந்த பதிவில் சவடால் அடித்தபடியே ஜனநாயக பஜனை பாடும் தமிழ்மணி, "நான் மருதையனோடே விவாதித்தவன் நோக்கு தெரியுமோ?" என்று தனது பிரதாபத்தை பற்றியெல்லாம் பேசுகிறார். மருதையனோடே விவாதித்த தமிழ்மணி இந்த சாதாரண சம்பூகன் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் இருப்பது ஏன்? என்று நாம் அவரிடம் கேட்கிறோம்.,

தமிழ்மணியின் நேர்மை பற்றி நமக்கு தெரியாததல்ல, மைசூர் அரண்மனையின் வடிவமைப்பில் கட்டப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலை கழகத்தை பெரிய கோவில் வடிவில் கட்டப்பட்டது என்று வாய்கூசாமல் ஆணித்தரமாக பொய் சொன்னவர்தான் இந்த தமிழ்மணி, அதனை நான் பொய் என்று எடுத்துக் கூறிய பொழுது தனது தவறை ஒத்துக்கொள்ளாமல் எங்கேயோ படித்ததைதான் கூறினேன் என்று எழுதியவர்தான் இந்த யோக்கிய சிகாமணி, இவர் மருதையனோடும் மற்றவர்களோடும் விவாதித்த இலட்சணத்தை நாம் துருவி துருவி கேட்டால் "நான் மருதையன் என்றுதான் சொன்னேன் எந்த மருதையன் என்று சொன்னேனா? நான் கூறியது எங்க வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை வைத்திருக்கும் மருதையனை" என்று கூட‌ பதில் கூறுவார், யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்றால் அடுத்த முறை எழுதும் பொழுது "நான் மாவோவோடே விவாதித்திருக்கிறேன்" என்று எழுதுவார், இதுதான் த‌மிழ்ம‌ணியின் நேர்மை, பெரியார் வாழ்நாள் முழுக்க‌ க‌ம்யூனிச‌த்தை எதிர்த்தார் என்று புர‌ளி கிள‌ப்பிய‌ பார்ப்ப‌ன‌ கும்பலிட‌ம் வேறு என்ன‌ நேர்மை இருக்கும்?

பெரியாருக்கு க‌ம்யூனிஸ்ட்க‌ள் க‌ருத்து சுத‌ந்திர‌ம் கொடுக்க‌மாட்டார்க‌ளாம்., இப்படி அக்கறை காட்டும் தமிழ்மணியிடம் கேட்கிறேன், இன்று பெரியாரிய‌வாதிக‌ளுக்கே க‌ருத்து சுத‌ந்திரம் இல்லையே அதுபற்றி நீங்கள் ஏன் இதுவரை எழுதவில்லை பார்ப்பனமணி?

ஒரு உதார‌ண‌த்திற்கு சொல்கிறேன் த‌ந்தை பெரியார் திராவிட‌ர் க‌ழ‌க‌ம் ஜ‌ன‌வ‌ரி 5ம் தேதி நாத்திக‌ர் விழா கொண்டாட‌ போவ‌தாக‌வும், எம்.ஆர்.இராதா நூற்றாண்டு விழாவை அத்தோடு சேர்ந்து கொண்டாட‌ போவ‌தாகவும், அத‌ன் நினைவாக‌ சென்னை எம்.ஜி.ஆர் ந‌க‌ரில் ஒரு நிழ‌ற்குடை திற‌க்க இருப்ப‌தாக‌வும் அறிவித்த‌து, இத‌ற்காக‌ சுவ‌ரொட்டி அச்ச‌டித்து, நோட்டீஸ் விநியோகித்து பிர‌ச்சார‌மும் செய்து வ‌ந்த‌து, விழா ஏற்பாடுக‌ளெல்லாம் முழுமையாக‌ முடிவடைந்துவிட்ட‌ நிலையில், தென்காசியில் குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌திதிட்ட‌ம் தீட்டிக் கொடுத்த‌ இராம‌.கோபால‌ன் என்ற‌ தீவிர‌வாதி அந்த‌ விழாவிற்கு த‌டை உத்த‌ர‌வு வாங்கினான், அத‌ற்கு அவ‌ன் கூறிய‌ கார‌ண‌ம் நாத்திகம் பேசினால் இந்துக்க‌ளின் ம‌ன‌து புண்ப‌டும், மேலும் பெரியார் தி.க‌வுக்கும் நக்சலைட்டு தீவிர‌வாதிக‌ளுக்கும் தொட‌ர்பு இருக்கிற‌து., இப்ப‌டி பீதி கிள‌ப்பி அந்த‌ விழாவிற்கு த‌டையுத்த‌ர‌வு வாங்கிய‌ அந்த‌ ப‌ண்ணாடைத்தான் இன்று த‌ன‌து அலுவ‌ல‌க‌த்திற்கே குண்டு வைப்ப‌த‌ற்கு ச‌தி திட்ட‌ம் தீட்டியிருக்கிற‌து.

நாத்திக‌ பிர‌ச்சார‌ம் செய்கின்ற‌ க‌ருத்து சுத‌ந்திரத்தை கூட மறுக்கும் இந்த‌ இந்துத்துவ‌ பாசிச‌வாதிக‌ள் ப‌ற்றி க‌ண்டித்திருக்கிறாரா த‌மிழ்மணி? பெரியாரிய‌ க‌ருத்துக்க‌ள் பேச‌க்கூடாது என்று க‌ம்யூனிஸ்ட்க‌ளா வ‌ந்து த‌டையுத்த‌ர‌வு வாங்கினார்க‌ள், த‌டையுத்த‌ர‌வு வாங்கிய‌வ‌ன் ஆரிய‌ இந்தும‌த‌ வெறிய‌னான‌ இராம‌.கோபால‌ன், நாத்திக‌ பிர‌ச்சார‌ம் செய்வ‌தை கூட‌ ச‌கித்துக்கொள்ளாத‌ அந்த‌ உரிமையையும் ம‌றுக்கின்ற‌ இந்த‌ பாசிச‌வாத‌ கும்ப‌ல் ப‌ற்றி த‌மிழ்ம‌ணி த‌ன‌து துவார‌ங்க‌ளை திறக்காதது ஏன்?

பெரியாரிய‌ கொள்கைக‌ள் பேச‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் க‌ருத்து சுத‌ந்திர‌ம் த‌ர‌மாட்டார்க‌ளாம் அத‌னால் இவ‌ர் க‌ம்யூனிஸ்ட்க‌ளோடு விவாதிக்கிறாராம், பெரியாருக்காக‌ பேசுவ‌தாக‌ கூறும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து கும்பலில் இருக்கும் ப‌ழைய‌ அனானி, பெரியாரிய கருத்துக்களை "இனவெறி கருத்துக்கள்" என்று எழுதிய பொழுது அதனை மறுக்காமல் மெளனம் சாதித்ததோடு அந்த பின்னூட்டதை பதிவாக்கி அந்த இந்துமத வெறியனை ஊக்கப்படுத்தியது ஏன்?

இப்படி பொய், புர‌ளி, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌ம் இவ‌ற்றை ஒருங்கே கொண்ட‌ தமிழ்ம‌ணி என்கிற‌ ஜ‌ன‌நாய‌க‌விரோத‌, ம‌னித‌ விரோத‌ பார்ப்ப‌ன‌ கும்ப‌ல் ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ஜ‌னை பாடுவ‌து உண்மையில் ஜ‌க‌ஜோதியாக‌த்தான் இருக்கிற‌து, ச‌ங்கர‌ச்சாரி தீண்டாமை எதிர்ப்பு பேசுவ‌து போல‌.,

கடைசியாக தமிழ்மணி உச்சஸ்தாயில் சொல்கிறார்

//ஓடிவிட மாட்டேன்//

"எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாரே இவுரு ர்ர்ர்ர்ரொம்ப நல்லவரு" இப்படி சொல்லுவதை தவிர நாம் வேறு என்ன சொல்லமுடியும் இதற்கு.,