தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....

தமிழ் வழிபாட்டுரிமையை வலியுறுத்தி சிதம்பரத்தில் நடத்த பொதுக்கூட்ட அழைப்பிதழை போட்டு தமிழ்மணி சில கேள்விகளை எழுப்பியிருந்தார், அதிலிருந்த கேள்விகள் பொதுவாக நாத்திகர்களை நோக்கி எழுப்பப்பட்டிருந்ததாலும், தமிழ்மணி எழுதிய அப்பதிவு சமஸ்கிருத ஆதரவு பார்ப்பனீய உள்ளடக்கத்தை கொண்டிருந்ததாலும் அதற்கு பதிலளிக்கும் முகமாக இந்த பதிவினை போட்டு, தமிழ்மணியின் கேள்விகளுக்கு பதிலளித்து அதனை விளக்கியிருந்ததோடு, அடிப்படையான சில கேள்விகளையும் நான் எழுப்பியிருந்தேன்.

ஒரு நாள் முழுக்க அந்த பதிவு தமிழ்மண திரட்டியின் முகப்பிலேயே இருந்தது, காரணம் பதிவர் சதுக்கபூதம் என்பவர் தமிழ்மணிக்கு ஆதரவாக‌ நம்முடன் தொடர்ச்சியாக வாதிட்டார், கிட்டதிட்ட 80 பதிவர்களுக்கு மேல் அப்பொழுதே அந்த பதிவை படித்திருந்தனர், ஆனால் நாம் யாருக்காக விளக்கங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தோமோ அந்த தமிழ்மணி இந்த பதிவினை படிக்கவில்லையாம்

//நண்பர் சம்புகன்,
உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். அதனால், பதிவுக்கு பதில் எழுதாததற்கு மன்னிக்கவும். ஆனால், உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களையும் ஏற்கெனவே பலர் கேட்டிருக்கின்றனர். அதற்கான பதிலையும் மறுமொழியாக என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்
.//


என்று இப்போது கூறியிருக்கிறார். நாமும் நம்புவோமாக. தமிழ்மணி(எ)’பார்ப்பன’மணிக்கு எப்பொழுதுமே தூரப்பார்வைதான் போல தெரிகிறது, சீனா, ரஷ்யா, கம்போடியா, லாவோஸ், கியூபா, கொரியா, அமெரிக்கா என்று எப்பொழுதும் எல்லை கடந்து துலாவிக்கொண்டிருக்கும் தமிழ்மணி உள்ளூர் பிரச்சணைகளை பற்றியோ அதற்கான தீர்வினை பற்றியோ இதுவரை எழுதியதாக தெரியவில்லை மாறாக கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் மட்டுமே இதுவரை ஜல்லியடித்து வந்திருக்கிறார்.,

கம்யூனிஸ்டுகள் சர்வாதிகாரிகள் என்று ஒவ்வொரு பதிவிலும் எழுதி வந்திருக்கிறார், இது போன்ற பதிவுகளுக்கு நேற்று வரை பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வந்த நண்பர் சதுக்க பூதம் இன்று நமக்கு அனுப்பியிருக்கும் பின்னூட்டத்தை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது பொறுத்தமாக இருக்கும்

சதுக்கபூதம் said,


There seems to be some truth in ur
view.
Hindu-Hindi(sanskrit)-India facism is more dangerous than dictatorship

.

இதன் பொருள் என்னவென்றால் உங்களுடைய(சம்பூகன்) பார்வையில்(தமிழ்மணி விவகாரத்தில்)
உண்மை இருப்பதாக தெரிகிறது, இந்து இந்தி(சமஸ்கிருதம்) இந்திய பாசிசம் ஆகியவை
(கம்யூனிச‌)ச‌ர்வாதிகார‌த்தைகாட்டிலும் அபாய‌க‌ர‌மான‌வை.

சதுக்க பூதம் இப்ப‌டி கூறியிருக்கிறார், த‌மிழ்ம‌ணியின் ப‌திவுக‌ளை தொட‌ர்ந்து ப‌டித்து அத‌ற்கு பின்னூட்ட‌ம் இட்டு வ‌ந்த‌ ஒரு ப‌திவ‌ரே இவ்வாறு கூறியிருப்ப‌தன் மூல‌மாக‌ த‌மிழ்ம‌ணியை(எ) 'பார்ப்பன'மணியை தெளிவாக‌ புரிந்து கொள்ள‌முடிகிற‌த‌ல்ல‌வா, இத‌னை அனைத்து ப‌திவ‌ர்க‌ளும் ப‌டிப்பினையாக‌ எடுத்துக்கொண்டு, இது போன்று முக‌மூடி போட்டுக்கொண்டு வ‌ரும் பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌ம் வெகு ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌ வேண்டும். இன்று தமிழ்மணி என்ற பெயரில் தமிழர்க்கு விரோதமாக எழுதும் இவர்கள், நாளை பெரியார் பெயரில் ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாகவும் எழுதுவார்கள்.

ச‌ரி இனி த‌மிழ்ம‌ணி போட்டிருக்கும் ப‌தில்க‌ளை பார்ப்போம், இங்கு இன்னொரு விச‌ய‌த்தை குறிப்பிட்டாக‌ வேண்டும், த‌மிழ் வ‌ழிபாட்டுரிமைக்கு எதிராக‌ த‌மிழ்ம‌ணி தெரிவித்த‌ க‌ருத்துக்க‌ளை எடுத்துக்காட்டிய‌த‌ன் பின்னினைப்பாக‌த்தான் எனது கேள்விகளை தமிழ்மணிக்கு தொடுத்திருந்தேன், கேள்விக‌ளுக்கு பதிலளிக்கிறேன் என்ற பெயரில் எழுதியிருக்கும் தமிழ்மணி, அவரது கேள்விகளுக்கு நாம் அளித்த பதில்களையும், மறுப்புகளையும், நாம் தொடுத்த குற்றச்சாட்டுகளையும் புறக்க‌ணித்திருப்ப‌தால், த‌மிழ்ம‌ணி அவ‌ற்றை ஏற்றுக் கொண்டு த‌ன்னை ‘பார்ப்ப‌ன‌’ம‌ணி யாக‌ ஒத்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் நாம் பொருள்கொள்ள‌ வேண்டும்.

இங்கு அவ‌ர‌து கேள்விக‌ளும் ப‌தில்க‌ளும் வெவ்வேறு வ‌ண்ண‌த்தில் கொடுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தோடு, அவ‌ர‌து ப‌தில்க‌ள் ப‌ற்றிய‌ என‌து குறிப்புக‌ளையும் அத‌ன் கீழே கொடுத்திருக்கிறேன். வாசகர்கள் படித்து 'பார்ப்பன'மணியை அடையாளங் கண்டு கொள்ளவும்.

நமது கேள்வி: அனைத்து த‌மிழ‌ர்க‌ளுக்கும் க‌ருவ‌றையின் உள்ளே சென்று த‌ன‌து மொழியில் வ‌ழிப‌ட‌ உரிமை இருக்கிற‌தா இல்லையா? இல்லை என்றால் ஏன்? இந்த போராட்டம் சரியா தவறா?


தமிழ்மணி பதில் : நிச்சயம் உண்டு. இருக்கவேண்டும்.

நமது குறிப்பு: நிச்ச‌ய‌ம் உரிமை உண்டு, கருவறையின் உள்ளே சென்று தனது மொழியில் வழிபடும் உரிமை இருக்க‌ வேண்டும் என்று ம‌ட்டும் கூறியிருக்கும் த‌மிழ்ம‌ணி இந்த‌ போராட்ட‌ம் ச‌ரியா? த‌வ‌றா? என்ற‌ கேள்விக்கும் ப‌தில‌ளித்திருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும் என்ப‌தோடு, த‌மிழ் வ‌ழிபாட்டுரிமையை ம‌றுத்து அராஜகம் செய்துவரும் சிதம்பரம் தீட்சித‌ ரெள‌டிக‌ளை க‌ண்டித்திருந்தால் இன்னும் இன்னும் சிற‌ப்பாக‌ இருந்திருக்கும். என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்து கவலைப்படும் தமிழ்மணி, இன்று நடந்து கொண்டிருக்கும் தீட்சிதர்களின் வன்முறை குறித்து கவலைப்படவேண்டாமோ?

நமது கேள்வி: சித‌ம்ப‌ர‌ம் கோவிலை ஏன் அரசுடைமையாக்க‌க்கூடாது?


தமிழ்மணி பதில்: அரசுடமை ஆக்குவதும் ஆக்காததும், அந்தந்த அரசாங்கத்தையும் அந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்தவர்களையும் பொறுத்தது. எத்தனையோ கோவில்களை அரசுடமையாக்கியிருக்கிறார்கள். சிதம்பரத்தை ஆக்கினால் என்ன?
ஆனால், அரசுடமை என்ற பெயரில் திமுக அரசு செய்வது, செய்யக்கூடியது வேறு, கம்யூனிஸ்டுகளின் அரசுடமை கொள்கை வேறு. இதனை தனி பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.



நமது குறிப்பு: அர‌சுடைமை ஆக்குவ‌தும், ஆக்காத‌தும் அந்தந்த‌ அர‌சாங்க‌த்தையும், தேர்தெடுத்த‌வ‌ர்க‌ளையும் பொறுத்த‌து என்று இப்பொழுது எழுதும் திருவாள‌ர் தமிழ்மணி(எ)’பார்ப்ப‌ன‌’ம‌ணி இர‌ண்டுநாட்க‌ளுக்கு முன்பு என்ன‌ எழுதினார் தெரியுமோ, இதோ பாருங்க‌ள்

//அதென்ன கோவிலை அரசுடைமையாக ஆக்குவது? அது காலம் காலமாக தனியார் கோவில். அதனை அவர்களே கட்டியிருக்கமாட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். எவனோ ராஜா அவர்களிடம் தாரை வார்த்தான் என்றே வைத்துக்கொள்வோம். அதற்கு என்ன இப்போது? இருந்துவிட்டு போகட்டுமே//

"நேற்று தீட்சிதர்களிடமே இருந்துவிட்டு போக‌ட்டுமே" என்று க‌ருத்து சொல்லிவிட்டு இன்று "அது அந்த‌ அர‌சாங்க‌த்தை பொறுத்தது" என்று ப‌தில் சொல்கிறார் இந்த இர‌ட்டை நாக்கு அம்பி. அதோடு "அரசுடைமை என்ற‌ பெய‌ரில் தி.மு.க‌ அர‌சு செய்வ‌து வேறு, க‌ம்யூனிச‌ அர‌சு செய்வ‌து வேறு" என்ற‌ த‌ன‌து வ‌ழ‌க்க‌மான கம்யூனிச எதிரிப்பு ஜ‌ல்லியையும் அவிழ்த்துவிடுகிறார் தமிழ்மணி.,

அய்யா தமிழ்ம‌ணி இப்போது என்ன‌ த‌மிழ்நாட்டில் க‌ம்யூனிச‌ அர‌சாங்க‌மா ந‌ட‌க்கிறது? தி.மு.க‌ அர‌சாங்க‌ம்தானே ந‌ட‌க்கிற‌து, இப்போது அர‌சுடைமையாக்குவ‌தால் என்ன‌ ஆப‌த்து வ‌ந்துவிட‌ப்போகிற‌து, இதுவ‌ரை ப‌ல‌ இல‌ட்ச‌ம் பொருட்க‌ள் அங்கிருக்கும் திருட்டு தீட்சித‌ர்க‌ளால் அபேஸ் செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து மேலும் அந்த‌ தீட்சித‌ர் கும்ப‌ல் இன்றைய‌ நிலையில் பெரிய‌ வ‌ன்முறை கூட்ட‌மாக‌ இருக்கிறது, இப்படியிருக்கும் பொழுது அந்த கோவிலை காப்பாற்ற வேண்டுமானால் அரசுடைமையாக்குவது அவசியமல்லவா? நாளை ப‌க்தி செலுத்துப‌வ‌ர்க‌ள் மீது க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ன்முறையை ஏவிவிடுவார்க‌ள் என்று க‌வ‌லை கொள்ளும் நீங்க‌ள், ப‌க்தி செலுத்தி இறைவ‌னை பாட‌த்துடிக்கும் சிவனடியார் ஆறுமுக‌சாமி மீது வ‌ன்முறையை ஏவி கையை முறித்‌ததோடு அவரை கொல்லவும் சமயம் பார்த்துக்கொண்டிருக்கும் தீட்சித‌ர் கூட்ட‌த்தை அல்ல‌வா க‌ண்டிக்க‌ வேண்டும், இந்த‌ வ‌ன்முறை கும்ப‌லை நினைத்த‌ல்ல‌வா க‌வ‌லை கொள்ள‌ வேண்டும். அதை விட்டுவிட்டு என்றோ வரப்போகும் கம்யூனிச வன்முறை குறித்துமட்டும் நீங்கள் கவலை கொள்வதன் மர்மம் என்ன?

நமது கேள்வி: க‌ட‌வுள் பெய‌ரை குறிப்பிடாத‌ அந்த‌ மிக‌ச்சில‌ ச‌ங்க‌த்த‌மிழ் பாட‌ல்க‌ள் எத்த‌னை?

தமிழ்மணி பதில் : எனக்கு தெரியாது. ஆனால், திமுகவுக்கு கடவுள் பெயர் வராத தமிழ் பாடல்களே தமிழ் பாடல்கள், மற்றவையெல்லாம் அழிக்கப்படவேண்டும் என்று எந்த விதமான கருத்தும் இல்லை. ஆனால், கம்யூனிஸ்டுகள், வரலாற்றிலேயே கை வைப்பவர்கள். இதெல்லாம் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று அழித்தொழிப்பில் இறங்கியவர்கள். உதாரணமாக கலைஞர் தஞ்சை பல்கலைக்கழகத்தை தஞ்சை கோவில் பாணியில் வடிவமைத்திருக்கிறார். ஆனால், அது கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பூர்ஷ்வா கலாச்சாரம் என்று இடிக்கப்படும். இதனையே சீன கம்யூனிஸ்டுகளும், போல்போட் கம்யூனிஸ்டுகளும் செய்தார்கள். அதனையே இவர்களும் செய்வார்கள்.


நமது குறிப்பு: தெரியாம‌லேயே "க‌ட‌வுள் பெய‌ர் குறிப்பிடாத‌ ச‌ங்க‌த்த‌மிழ்பாட‌ல்க‌ள் மிக‌ச்சில‌" என்று எவ்வாறு கூறினீர்க‌ள் த‌மிழ்ம‌ணி. க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ர‌லாற்றிலேயே கைவைப்ப‌வ‌ர்க‌ள் என்று க‌வ‌லை கொள்ளும் நீங்கள், 'அந்த‌ண‌ர் வ‌ர‌லாறு' என்ற‌ பெய‌ரில் புத்த‌க‌ம் எழுதி, ஆரிய‌ர்க‌ள் இந்த‌ நாட்டின் பூர்வ‌குடிக‌ள் என்று வரலாற்றையே இன்று திரித்து எழுதிக்கொண்டிருக்கும் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கும்ப‌லை க‌ண்டிக்காம‌ல் என்றோ வ‌ந்து க‌ம்யூனிஸ்ட்க‌ள் திருத்திவிடுவார்க‌ள் என்று க‌வ‌லை கொள்வ‌து ஏன்? அந்த‌ பார்ப்ப‌ன‌ கும்ப‌லும், சித‌ம்ப‌ர‌ம் தீட்சித‌ பொறுக்கி கும்ப‌லும் நெருங்கிய‌ தொட‌ர்பு கொண்ட‌வைதானே, NCERT புத்த‌க‌ங்க‌ளில் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்ப‌ல் கைவைத்து திருத்தியதைவிட‌வா, க‌ம்யூனிஸ்ட்க‌ள் செய்துவிட‌ப்போகிறார்க‌ள்? இன்றும் இந்துத்துவவாதிகள் ந‌ட‌த்திக்கொண்டிருக்கும் ப‌ள்ளிக்கூட‌ங்க‌ளில் பிள்ளைகளுக்கு அ-என்றால் அயோத்தி, ஆ-என்றால் ஆரிய‌ன் என்றும் கூட சொல்லித்தரப்படுகிறதுதானே. இன்றைய‌ நிலையில் தொட‌ரும் இந்த‌ பாசிச‌ அட்டூழிய‌ங்க‌ளை க‌ண்டிக்க‌ வ‌க்கில்லாத‌ நீங்க‌ள் என்றோ வ‌ர‌ப்போகும் க‌ம்யூனிச‌ம் குறித்து ப‌தைப்ப‌து ஏன்?

மேலும் “கம்யூனிஸ்ட்கள் வந்து த‌ஞ்சை தமிழ் ப‌ல்க‌லை க‌ழ‌கத்தை இடித்துவிடுவார்கள்” என்ற உங்கள் பூச்சாண்டி இருக்கட்டும், முதலில் அந்த பல்கலை கழகம் பெரிய கோவில் போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிறது என்று ஆதார‌மில்லாமல் எப்ப‌டி உங்களால் புளுக‌முடிகிறது.,

தமிழறிஞ‌ர்க‌ள் அம‌ருகின்ற‌ இட‌மாத‌லால் அந்த‌ ப‌ல்கலைக‌ழ‌க‌ம் ஒரு அர‌ண்மனையின் தோற்ற‌த்தில் கோட்டை போன்று வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்ட‌து, அதற்கு மைசூர் அர‌ண்மனையை மாதிரியாக‌ எடுத்துக்கொண்டிருக்கிறார்க‌ள், மேலும் அங்கிருக்கும் பெரிய‌ நூல‌க‌ம் பாராளூம‌ன்ற‌ வ‌டிவ‌த்தில் வ‌ட்ட‌மாக‌ வ‌டிவ‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து, இத‌னை நான் அந்த‌ ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்திற்கு சென்று பார்த்தவன் என்ற முறையிலும், அங்கிருக்கும் நூலகத்தில் ப‌டித்த‌வ‌ன், ஊழிய‌ர்களோடு உரையாடிய‌வ‌ன் என்கிற‌ முறையிலும் கூறுகிறேன், அந்த‌ ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தின் வெளியே சோழ‌ர் கால‌த்தை நினைவுப‌டுத்தும் வ‌கையில் புலி சிலைக‌ள் நிறுவ‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன, நல்ல‌ வேளையாக‌ அது அய்ய‌ப்ப‌னின் வாக‌னம் அதனால் பொறித்து வைத்திருக்கிறார்கள் என்று க‌தைய‌ள‌க்காம‌ல் இருந்தீர்களே, அதுவரையில் மகிழ்ச்சி!!

நீங்க‌ள் எந்த‌ அடிப்ப‌டையில் அத‌னை கோவில் வ‌டிவில் க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று கூறினீர்க‌ள் அது கோபுர‌ம் போன்ற‌ வ‌டிவ‌த்தை மேலே கொண்டிருக்கிற‌து என்ப‌தாலா? ம‌ன்ன‌ர் கால‌த்து கோட்டைக‌ள் எப்ப‌டி இருந்த‌து என்று உங்க‌ளால் கூற‌முடியுமா த‌மிழ்ம‌ணி, சில‌ப்ப‌திகார‌த்தை ப‌டித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் விவ‌ர‌ம் புரியும், ம‌ன்ன‌ர் கால‌த்து அர‌ண்ம‌னைக‌ளும் கூட‌ கோபுர‌ம் போன்ற‌ வ‌டிவில்தான் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ன‌, இன்னும் சொல்ல‌ப்போனால் அந்த‌ கோபுர‌ங்க‌ளும் கூட‌ திராவிட‌ முறையிலான‌ அமைப்பு என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌து, இங்கிருக்கும் கோபுர‌ங்க‌ளும், வ‌ட‌நாடுக‌ளில் இருக்கும் கோபுர‌ங்க‌ளும் வ‌டிவ‌த்தில் ஒத்திருப்ப‌தில்லை, அத‌ற்கு கார‌ண‌ம் நான் முன்பே கூறிய‌து போல‌ இங்கிருக்கும் கோபுரங்க‌ள் திராவிட‌ முறைப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட்டவை என்ப‌துதான், இது குறித்து ஒரு க‌ட்ட‌ட‌க‌லை மாண‌வ‌ரை நான் தொட‌ர்பு கொண்டு கேட்ட பொழுது அவ‌ர் இங்கிருக்கும் க‌ட்ட‌ட‌ங்க‌ள் நான்கு வ‌கையில் ப‌குக்க‌ப்ப‌டுவ‌தாக‌ கூறினார், திராவிட‌ம், வேச‌ர‌ம், நாக‌ரம் என்று அவ‌ற்றின் மூன்று வ‌கைகளின் பெய‌ரை குறிப்பிட்ட‌தோடு தூக்கம் கலையாமலிருந்த காரணத்தால் அந்த‌ இன்னொரு வகையை புத்த‌க‌த்தை பார்த்து பிற‌கு கூறுவ‌தாக‌ கூறிச்சென்றார்.

ஆக‌ இங்கிருக்கும் க‌ட்ட‌ட‌ங்க‌ள் எல்லாம் இப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும் பொழுது அது கோவில் வ‌டிவில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌தாக‌ கூசாம‌ல் வ‌ரலாற்றை புர‌ட்டி, வ‌ர‌லாற்றிலேயே கைவைக்கிறீர்க‌ளே த‌மிழ்ம‌ணி, க‌ம்யூனிஸ்ட்க‌ள் வ‌ந்தால் வ‌ர‌லாற்றில் கைவைத்துவிடுவார்க‌ள் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டே த‌மிழ் ப‌ல்க‌லை க‌ழ‌க‌த்தின் வ‌ர‌லாற்றையே புர‌ட்டுகிறீர்க‌ளே த‌மிழ்ம‌ணி உங்க‌ளுக்கு வெட்க‌மாக‌ இல்லையா? தெரியாம‌ல் கூறின‌தாக‌ எடுத்துக்கொண்டாலும், எதுவும் தெரியாம‌லேயே இவ்வ‌ள‌வு ஆணித்த‌ரமாக‌ பேசுகிறீர்க‌ளே, அதுவும் க‌ண்ணுக்கு முன்னால் தெரியும் ஒரு க‌ட்ட‌ட‌ அமைப்ப்பு விசயத்திலேயே புரளி கிளப்பி புளுகும் நீங்கள், க‌ண்ணுக்கே தெரியாத‌ தூர‌தேச‌த்தில் க‌ம்யூனிஸ்ட்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ள் ப‌ற்றி தின‌ம் தின‌ம் க‌தைய‌ள‌க்கிறீர்க‌ளே அதில் எந்த‌ அள‌வுக்கு உண்மை இருக்கும்.


நமது கேள்வி: ராம‌னையும் கிருஷ்ண‌னையும் வ‌சைமாறி பொழிவ‌து த‌வ‌றா?


தமிழ்மணி பதில்: மனிதர்களது கருத்துரிமையை எப்போதுமே நாம் உரத்த குரலெடுத்து காப்பாற்றவேண்டும். ராமனை கிருஷ்ணனை வசை மாறி பொழிவதற்கு தற்போது இருக்கும் உரிமை போலவே, கம்யூனிஸ்டுகளின் சாம்ராஜ்யத்தில் லெனின், மாவோ, போல்போட், ஸ்டாலின், மார்க்ஸ் எங்கல்ஸ் ஆகியோர் மீது வசை மாறி பொழிவதற்கு சுதந்திரம் வேண்டும். அது இருக்காது என்பதாலேதானெ நான் கம்யூனிஸ்டுகளை எதிர்க்கிறேன்? இந்த சுதந்திரம், கம்யூனிஸ்ட்கள் அமைக்கப்போகும் புரட்சி நாட்டில் இருக்குமா என்பதை அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். அப்படி குரலெடுத்து வசை மாறி பொழிபவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதையும் கேட்டுச் சொல்லுங்கள்.

நமது குறிப்பு: ம‌க்க‌ள‌து க‌ருத்துரிமையை காப்பாற்ற‌த்துடிக்கும் உங்க‌ள‌து ஜ‌ன‌நாய‌க‌ ப‌ண்பை நினைத்தால் அப்ப‌டியே புல்ல‌ரித்து போகிற‌து த‌மிழ்ம‌ணி, உண்மையில் நீங்க‌ள் க‌ருத்துரிமைக்கு குர‌ல் கொடுக்க‌ வேண்டும் என்று நினைத்தால் இன்றைய‌ நிலையில் இராம‌னையும், கிருஷ்ண‌னையும் விமர்சிப்பவர்களுக்காகத்தான் குர‌ல் கொடுக்க‌ வேண்டும்.,

"இராம‌ன் ஒரு குடிகார‌ன்" என்று வால்மீகி இராம‌ய‌ண‌த்தில் இருக்கும் ஒரு உண்மையை கூறிய‌ கார‌ண‌த்திற்காக‌ இங்கிருக்கும் ஒரு முத‌ல்வ‌ரின் த‌லையே விலை பேச‌ப்ப‌டுகிற‌து என்றால் பார்த்துக்கொள்ளுங்க‌ளேன் இன்று இந்தியாவில் இருக்கும் கருத்துரிமையின் இலட்சனத்தை., மேலும் இன்றைய‌ நிலையில் இந்தியாவில் இராம‌னை தேசிய‌ நாய‌க‌னாக‌ ஏற்றுக்கொள்ள‌வில்லை என்றால் முஸ்லீம்க‌ள் ஆயிர‌க்க‌ண‌க்கில் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌டுகிறார்க‌ள், முஸ்லீம‌க‌ள் இராம‌னை ஏற்றுக்கொள்ள‌ சொல்லி க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிறார்க‌ள், ஆக‌வே திருவாள‌ர் த‌மிழ்ம‌ணி அவ‌ர்க‌ளே க‌ம்யூனிச‌ ஆட்சி வ‌ந்து அதில் ஸ்டாலின், லெனின், மாவோ குறித்து விம‌ர்சிக்க‌ க‌ருத்துரிமை கேட்டு இன்று போராடுவ‌தை காட்டிலும் இராம‌னையும், கிருஷ்ண‌னையும் விம‌ர்சிக்க‌வும் அந்த பார்ப்பன‌ கடவுளர்களை பற்றி உண்மைக‌ளை எடுத்துச் சொல்ல‌வும் கூடிய‌ நாத்திக‌ர்க‌ளின் க‌ருத்துரிமைக்காக‌வும், த‌ன‌து க‌ட‌வுளை ந‌ம்ப‌ வாய்ப்ப‌ளிக்கிற‌ முஸ்லீம்க‌ளின் சுத‌ந்திர‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுங்க‌ள்., இப்ப‌டி விம‌ர்சிப்ப‌வ‌ர்க‌ளையும், வ‌ண‌ங்குப‌வ‌ர்க‌ளையும் இன்று ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள் எப்ப‌டி ந‌ட‌த்திக்கொண்டிருக்கிறார்க‌ள் என்ப‌தையும் என‌க்கு கொஞ்ச‌ம் கேட்டு சொல்லுங்க‌ள்.


நமது கேள்வி: நீங்கள் தன்மான தந்தை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரை ஏற்றுக் கொள்கிறீர்களா இல்லை? ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றால் எந்த வகையில்? மறுக்கிறீர்கள் என்றால் எந்த வகையில்?


தமிழ்மணி பதில் : ஏன் மறுக்கவோ ஏற்றுக்கொள்ளவோ வேண்டும்? எல்லோருக்கும் அவரும் நாமும் இணையும் புள்ளிகள் ஏராளம் இருக்கும். அவரும் நாமும் பிரியும் புள்ளிகளும் ஏராளம் இருக்கும். அதுதானே ஒவ்வொருவரின் தனி இருப்பை அடையாளப்படுத்துகிறது? (பிரியும் புள்ளிகளை விட இணையும் புள்ளிகள் ஏராளம் என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்)

நமது குறிப்பு: தமிழ்மணி இது போன்ற பூடகமான பதில்கள் தேவையில்லை, நேரடியாக பேசுங்கள்? உங்க‌ளிடம் கேட்ப‌து என்ன‌வென்றால், பெரியாரை ப‌ற்றிய‌ உங்க‌ள் விம‌ர்ச‌ண‌ங்க‌ள் என்ன‌ என்ப‌துதான்? அதாவ‌து பிரியும் அந்த‌ சில‌ புள்ளிக‌ள் என்ன‌ என்ப‌துதான் என‌து கேள்வி. நேற்று எழுதிய‌ ப‌திவுக‌ளில் ஈ.வெ.இராம‌சாமி என்று ஆர்.எஸ்.எஸ்கார‌ர்க‌ள் போல‌ வ‌ன்ம‌ம் தெரிக்க‌ எழுதிய‌ நீங்கள், எங்க‌ளின் விடிய‌லுக்கு திசை காட்டிய‌ அந்த‌ கிழ‌வ‌னை ப‌ற்றி என்ன‌ விம‌ர்ச‌ண‌ம் வைத்துக்கொண்டிருக்கிறீர்க‌ள் என்று தெரிந்து கொள்ள‌த்தான் கேட்கிறேன், சொல்லுங்க‌ள்., பெரியார் வீட்டில் க‌ன்ன‌ட‌ம் பேசினார் என்று அப‌த்த‌ங்க‌ளை அவிழ்த்துவிடும் அயோக்கிய‌ சிகாம‌னியாகிய‌ நீங்க‌ள் எங்க‌ள் ப‌குத்த‌றிவு ப‌க‌ல‌வ‌னை ப‌ற்றி என்ன‌ குறை சொல்ல‌ப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள‌வே கேட்கிறேன் ப‌தில் சொல்லுங்க‌ள்.

19 comments:

Sathiyanarayanan said...

அருமை நண்பரே,

அருமையான பதிவுக்கு நன்றி

உங்களது பணித் தொடரட்டும்

வாழ்த்துக்கள் தோழரே

Anonymous said...

தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் கூட்டங்களின் கூட்டுப் பதிவு!

சம்பூகன் said...

வருகைக்கும் உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சத்தியநாராயணன், இங்கு வருகை தந்து பதிவினை படிக்கும் வாசகர்கள் உங்களது கருத்துக்களை பதிந்தால், நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.

Anonymous said...

பார்ப்பன சதியை புட்டு புட்டு வைக்கும் நன்பர் சம்பூகனுக்கு பாராட்டுகள்.

நட்பு சக்திகளுக்குள் சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருக்கும் தமிழ்மணி பதிவை மிகச்சிறப்பான முறையில் தோலுரித்துக் காட்டி வரும் சக தோழருக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

நீங்கள் “கருங்குயில்” கவிதைத் தொகுப்பை எழுதிய தோழர் சம்பூகன் என்றால்..எங்கள் ஊருக்கு வரும் போது தெரியப்படுத்தவும். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறோம்

இராவணன்,
கலைஞர் பகுத்தறிவு பாசறை
மதுராந்தகம்.

பி.கு - எனது முதல் தமிழ் தட்டச்சு முயற்சி இது. எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்

லக்கிலுக் said...

தமிழ்மணி என்பவரது ஆரம்ப பதிவுகளை யார் கண்டிருந்தாலும் அவர் ஒரு திராவிட பதிவர் என்று தவறாக புரிந்துகொண்டிருப்பார்கள்.

பார்ப்பன முகமூடியை சரியான நேரத்தில் கிழித்தெறிந்து உண்மையை வெளிக்காட்டிய சம்பூகனுக்கு நன்றி!

சம்பூகன் said...

நண்பர்களே தமிழ்மணியின் பதிவுகளில், பழைய அனானி என்று பெயரிட்டுக்கொண்டு ஒருவர் தொடர்ந்து பின்னூட்டமிட்டு எழுதி வருகிறார், அவர் உண்மையிலேயே பழைய்யயய அனானிதான் போலத்தான் தெரிகிறது, வைக்கம் போராட்டத்தின் பொழுது தந்தை பெரியார் நாத்திகரா என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, ஒரு ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியனுக்கே உரிய வன்மத்தோடு சம்பந்தமேயில்லாமல் முஸ்லீம் மதத்தின் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீது விழுந்து பிராண்டியிருப்பதோடு இந்து மதம் ஒரு ஜனநாயக மதம் என்று ஒரு பச்சைபொய்யை வேறு உதிர்த்து சென்றிருக்கிறார்.

வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் நாத்திகரா என்று அவர் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கான விளக்கத்தை பார்ப்போம்.

பழைய அனானி கூறுவது போலவே காங்கிரசின் பிரதிநிதியாகத்தான் தந்தை பெரியார் அந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றார், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 19 தலைவர்களும் கைதாகி வைக்கம் போராட்டம் தொய்வடைந்திருந்த‌ நிலையில், தந்தை பெரியாருக்கு தலைமையேற்கும்படி கடிதம் எழுதப்பட்டது. பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு ஈரோடு வந்த தந்தை பெரியார் உடனே வைக்கம் புறப்பட்டுச் சென்றார், போராட்டத்தில் ஈடுபட்டு சிறையும் சென்றார். காங்கிரஸின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்த தந்தை பெரியார் அங்கு காங்கிரஸ் பிரதிநிதியாக மட்டும் செயல்படவில்லை மாறாக இந்துமதத்தின் கொடுங்கரத்தால் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சூத்திர பஞ்சமர்களின் பிரதிநிதியாகவே போர்குணத்தோடு அந்த போராட்டத்திற்கு பெரியார் தலைமை கொண்டார், அதன் காரணமாகத்தான் காங்கிரஸ் தலைமையிலிருந்த காந்தி, இராஜாஜி, சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தும் கூட பெரியார் தொடர்ந்து போராடினார்.

மேலும் இந்த போராட்டத்தில் கைதாகி பெரியார் சிறையிலிருந்த பொழுது அவர் இறந்து போக வேண்டும் என்பதற்காக சத்ரு சம்ஹார யாகம் என்றவொரு யாகத்தை, பார்ப்பன நம்பூதிரி கும்பல் நடத்தியது, ஆனால் யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார், பெரியாரை கொல்ல அனுப்பப்பட்ட பூதம் திரும்பிசென்று மகாராஜாவையே கொலை செய்துவிட்டது என்று சிறையிலிருந்த ஒரு காவலர் பெரியாருக்கு முன்னாலேயே கூறி மகிழ்ந்த பொழுது தந்தை பெரியார் அதனை ஒரு மூடநம்பிக்கை என்று கண்டித்தார். இந்த சம்பவத்தை சமீபத்தில் வந்த 'பெரியார்' படத்தில் கூட காட்டியிருப்பார்கள். இந்த ஒரு சம்பவம் போதுமானது பெரியார் அப்போது ஆத்திகராக இருந்தாரா? அல்லது நாத்திகராக இருந்தாரா? என்பதை புரிந்து கொள்வதற்கு.

மேலும் மதுரை கோவில் நுழைவு போராட்டத்தில் பெரியார் பங்கேற்கவில்லை என்றும் கூட பழைய அனானி கூறியிருக்கிறார். ம‌துரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோவில் நுழைவு போராட்ட‌ம் என்ப‌தே ந‌ட‌க்க‌வில்லை என்பதை அப்பொழுதே விடுத‌லை ப‌த்திரிக்கையில் அம்ப‌ல‌ப்ப‌டுத்தினார் த‌ந்தை பெரியார்.

ப‌ழைய‌ அனானி இங்கு ம‌துரை கோவில் நுழைவு என்று குறிப்பிடுவ‌து, திணமனியில் பேட்டியளித்த‌ இல‌.க‌ணேச‌ன் என்ற‌ ஒரு இந்துத்துவ‌ வெறிய‌னும், புதிய‌ பார்வை என்ற‌ தேவ‌ர் ஜாதிவெறி ப‌த்திரிக்கையும் எழுதிய க‌ருத்துக்க‌ளை அடியொற்றி கூற‌ப்ப‌டுவ‌து. அதாவ‌து தேவர்(முத்துராமலிங்க தேவர்) ஜாதியின‌ரும், பார்ப்ப‌ன‌ர்க‌ளும்(வைத்திய‌நாத‌ அய்ய‌ர்) இணைந்துதான் கோவில் நுழைவு போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர் என்ப‌துதான் அந்த‌ க‌ருத்து.

இந்த‌ புளுகுமூட்டைக்கு எதிராக‌ 'வாலாச‌ வ‌ல்ல‌வ‌ன்' என்ற‌ பெரியாரிய‌ தொண்ட‌ர் ஒருவ‌ர் 'த‌லித் முர‌சு' என்ற‌ ப‌த்திரிக்கையில் அப்பொழுதே ஒரு ம‌றுப்பு க‌ட்டுரை எழுதியிருந்தார். த‌ற்பொழுது "கோவில் நுழைவில் திராவிட‌ இய‌க்க‌த்தின‌ரின் ப‌ங்கு" என்ற‌ ஒரு புத்த‌க‌த்தையும் எழுதியிருக்கிறார். புளுகு மூட்டைக‌ளை தூக்கி சும‌ந்து கொண்டு திரியும் ப‌ழைய்ய்ய‌ய‌ அனானி இந்த‌ புத்த‌க‌த்தை வாங்கி ப‌டித்து பார்க்க‌லாம்.,

அந்த பின்னூட்டத்தில் தந்தை பெரியார் பற்றி இப்படி நுட்பமாக புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கும் பழைய அனானி போதாக்குறைக்கு க‌ம்யூனிஸ்ட்க‌ள் மீதும் த‌ன‌து வெறுப்பை க‌க்கிவைத்திருக்கிறார், எவ‌னோ சிவ‌ப்பு ச‌ட்டைக்காரன், பழைய அனானி ட‌வுசரை ந‌ன்றாக‌ கிழித்துவிட்டு துரத்தியிருப்பான் போல... பாவம்...

சம்பூகன் said...

உங்களது பாராட்டுக்கு நன்றி லக்கி லுக், தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன போலியை பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்..

சம்பூகன் said...

கலைஞர் பகுத்தறிவு பாசறையை சேர்ந்த நண்பர் இராவணனின் வருகைக்குக்கும் பாராட்டுகளுக்கு நன்றி.தோழர், நீங்கள் குறிப்பிடுகின்ற சம்பூகன் நான் இல்லை.,

Anonymous said...

சிதம்பரம் நடராசர் கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முயன்று நீதிமன்றத்தில்
தோற்றுவிட்டது.வழக்கு இன்னும்
முடியவில்லை. இதை நினவில்
கொள்வது நல்லது. ஆகம விதிகள்படி கருவரையில்
நுழையும் உரிமை பூசை செய்பவர்களுக்கே உள்ளது.பல கோயில்களில் பார்ப்பனர் அல்லாதோரும் பூசகர்கள்.இங்கு பார்பனர் கருவரையில் நுழைய
முடியாது.பார்பனர் பூசகராக இருந்தாலும் பூசகர் மட்டுமே
செல்ல முடியும், அனைத்து
பார்ப்பனருக்கும் அந்த உரிமை
இல்லை.

மத வழிபாட்டு உரிமை
அரசியல் சட்டம் தருவது. அதில்
அத்துமீறி நுழைய அரசுக்கு அதிகாரம்
இல்லை.
மசூதிகளில் தமிழில் வழிபாடு இல்லையே, ஏன். மசூதிகளில்
தமிழிலும் வழிபாடு வேண்டும்
என்று நீங்கள் கோருவீர்களா.

எப்படி தேவாலயங்கள் கிறித்துவர்களிடமும், மசூதிகள்
இஸ்லாமியரிடமும் இருக்கின்றனவோ
அது போல்
இந்துக் கோயில்கள் இந்துக்களிடம்
இருக்க வேண்டும், அரசிடம் அல்ல.
இதுதான் தீர்வு. இந்து சமூகம் இதை
இன்னும் உணரவில்லை.

அசுரன் said...

//தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் கூட்டங்களின் கூட்டுப் பதிவு!//

வாழ்த்துக்கள் சாம்பூகன்.

கம்யுனிசம் குறித்த உங்களது கருத்துக்களை ஏன் எம்முடன் விவாதித்து புரிந்து கொள்ளக் கூடாது? உங்களது விமர்சனங்களை எனக்கு கடிதம் அனுப்புங்கள் asuran@inbox.com.

சமிபத்தில்தான் திருவினுடைய ஒரு பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் போது பார்ப்பன் எதிர்ப்பாளர்களிடையே சரியான உரையாடல் இல்லாதது ஒரு பிரச்சினையாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். இதில் யார் பக்கம் தவறு என்று எதுவும் நான் குறிப்பிட்டு பேசவில்லை.

ஏன் நாம் இந்த அம்சத்தில் உரையாட்க் கூடாது? உங்களது இமெயில் ஐடியை எனது தளத்தில் உங்களது ப்ளாக்கர் ஐடி மூலமாக வந்து கொடுத்துச் செல்லுங்கள். ஏனேனில் தமிழ்மணி கும்பல் உங்களது பெயரில் என்னுடன் உரையாடும் வாய்ப்பு 99% உள்ளது.

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன்,
அசுரன்

அசுரன் said...

தமிழ்மணீ ஒரு பார்ப்ப்னிய பதர் என்பத்ற்க்கு பதிவுல தோழர்கள் ஆதாரங்கள் இருப்பதாக கூறீனர். ஆயினும் அப்பொழுது அசுரன் தளத்தில் தமிழ்மணியின் அல்பத்தனத்தை விளம்பரப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருந்ததால் அந்த அம்சத்தில் தமிழ்மணி கும்பலை அவதனிப்பது(for sometime) என்று முடிவு செய்தோம். அப்பொழுதே அசுரன் தளத்தில் கிருத்துவ ஏகாதிபத்தியம் போன்ற RSS கும்பலுக்கே உரிய வசனங்களை உதிர்த்துச் சென்றான் இந்த பார்ப்பனமணி(இந்த கும்பலில் நீலகண்டன் போன்றவர்களும் இருக்கலாம்).


But u did the job at right time... with right spirit.

நண்பர் லக்கிலுக்,

தமிழ்மனியின் ஆரம்ப கால எழ்த்துக்களை வாசித்தால் கூட அவனது கள்ளாத்தனத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்(அவன் பார்ப்பன பயங்கரவாதி என்று சொல்ல முடியாது எனினும் அவன் ஒரு மிதவாத இந்துத்துவவாதி என்று சொல்லிவிடக் கூடிய அளவில்தான் அவனது ஆரம்ப கால எழுத்துக்கள் உள்ளன). நமது பிரச்சினை நாம் விசயங்களை வேக வேகமாக பரவசமாக உள்வாங்குவதுதான். கொஞ்சம் நிதானித்து யார் எழுதுகிறார் எதற்க்கு எழுதுகிறார், வார்த்தைகளுக்கிடையிலுள்ள அர்த்த இடைவெளி என்ன்? எதை பேசமால கள்ளமௌனம் சாதிக்கீறார் என்று கொஞ்சம் நிதானமாக பார்த்தால் பெரும்பாலன நேரங்களில் எதிரி அம்பலமாகிப் போய்விடுவான். ;-)

அசுரன்

அசுரன் said...

//இந்து சமூகம் இதை
இன்னும் உணரவில்லை.//

சிதம்பரம் கோயில் ஏற்கனவே தீட்சிதர் கையில் இருக்கிறது. அப்படியெனில் அது இந்துக்கள் கையில் இல்லையா? சரி யார் இந்த் இந்து? இவர்கள் கணக்கில் தீட்சிதர் தவிர யாரும் உள்ளே போக முடியாது எனில் இவர் சொல்லும் இந்து பார்ப்பந்தான்.

அடித்து துவைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி என்னும் சூத்திரன் ஒரு இந்து கிடையாது என்று ஒத்துக் கொண்ட அனானிக்கு நன்றிகள்.


//மத வழிபாட்டு உரிமை
அரசியல் சட்டம் தருவது. //

மத வழிபாட்டு உரிமை சரி. பார்ப்பன வெறியர்கள் பேசுவது சாதி வழிபாட்டு உரிமையல்லவா? இந்து மதம் எனப்படும் பார்ப்பனிய ஒடுக்குமூறை வாழ்க்கை தத்துவம் ஒரு மதமல்ல என்று இந்த அம்சத்தில்தான் சொல்கிறோம்.


//சிதம்பரம் நடராசர் கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முயன்று நீதிமன்றத்தில்
தோற்றுவிட்டது.//

பொய், இந்த அம்சத்தில் 1800களிலிருந்து இன்று வரை நடந்த வழ்க்கு நிலவரங்கள் வேண்டுமானால் தருகிறேன். முதல் வழக்கிலேயே அந்த கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என்பதுதான் தீர்ப்பு, மாறாக தீட்சிதர்களின் வருவாய் கோயிலை நம்பி இருக்கீர்து என்ற அம்சத்தில்தான் அவர்களுக்கு பாதி சாதகமான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

சம்பூகன் said...

இங்கு வருகைதந்து வாழ்த்தியிருப்பதோடு வாய்கொழுப்பெடுத்த ஒரு அனானிக்கு பதிலையும் கூறியிருக்கும் நண்பர் அசுரனுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

தமிழ்மணி என்ற வலைப்பூ "பார்ப்பனர் + பார்ப்பன அடிவருடிகள்" இணைந்து நிர்வகிக்கும் ஒரு கூட்டுப்பதிவு என்பதனை பலர் இங்கு கூறியிருகிறார்கள், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, கடந்த ஒரு வாரமாக நான் பார்த்து தமிழ்மணியின் வலைப்பூவை படித்த வகையில், ஜெர்மனியில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தமிழ்மணியிடமிருந்து இரவில் பதிவு வருவதும், மதிய நேரங்களில் பின்னூட்டம் வருவதுமாக அது 24 மணிநேரமும் இயக்கத்திலேயே இருப்பதால் ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்று எண்ண‌ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 'தமிழ்மணி' என்று நயவஞ்சகமாக பெயரிட்டுக்கொண்டிருப்பது ஒரு பார்ப்பன தந்திரம்தான் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை அதனைத்தான் அவரது கருத்துக்களிலிருந்தும் நிலைப்பாடுகளிலிருந்தும் இங்கு அம்பலப்படுத்தியிருக்கிறேன். பார்ப்பனர்கள் தனிதனியாக இயங்கினாலும் கூட அவர்கள் கட்டுக்கோப்பானவர்கள் என்பதும், ஒருவகையில் கருத்தியல் ரீதியாக அவர்கள் கூட்டுப்பதிவர்கள்தான் என்பதும் வெள்ளிடைமலை, இந்த நிலையில் நான் தனியாக நின்று அவர்களுக்கு பதிலளிப்பதை காட்டிலும், நண்பர்களூம், தோழர்களும் இதில் பங்கெடுத்துக் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

பார்ப்பனர்கள் இதற்கு முன்பு சல்மா அயூப், முரளி மனோகர் என்ற பல்வேறு பெயர்களிலும் எழுதி கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் தனிமடலில் தெரிவித்து இருக்கிறார், தமிழ்மணி என்று தமிழை தனது அடைமொழியாக்கி கொண்டு சதியில் இறங்க முற்பட்டிருந்த பார்ப்பனர்கள் தங்கள் கருத்துக்களின் வாயிலாக இப்போது அம்பலமாகியிருக்கும் நிலையில்,இது போன்று பல்வேறு பெயர்களில் எழுதமுற்பட்டு இணையத்தின் பார்ப்பனர்கள் அம்பலமான வரலாற்றினை சுருக்கமாக‌ மூத்த பதிவர்கள் யாராவது எழுத முற்பட்டால் என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு உதவியாய் இருப்பதோடு, பார்ப்பனர்களின் இந்த தொடர் முயற்சியை பலர் புரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் நண்பர் லக்கி லுக் போன்ற‌ மூத்த பதிவர்களால் அது இயலும் என்கிற காரணத்தால் இதனை அவருக்கு எனது வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

தமிழரங்கம் said...

ஒரு பார்ப்பனிய முகத்திரை கிழிய போராடும் சம்பகனுக்கு தோமையுடன் கூடிய வாழ்த்துகள்.
அவனை விடு, இவனை விடு என்று சொல்லும், நீ யார்? நீ பாhப்பான் என்றால், கோயில் உன்னுடையதா? வழிபடும் உரிமை, வழிபடதா உரிமை தனிமனிதனுடையது. இதற்கு அப்பால் இதைச் சொல்லி, கடவுளின் பெயரால் தின்னும் கூட்டத்துக்குரியதல்ல. ஒரு மனினதனாக உழைத்து தின்ன மறுக்கும் பாhப்பான், கடவுளின் பெயரல் தின்னுவதை உரிமை என்கின்றான். கோயிலுக்குள் செல்லக் கூட உரிமை கிடையாது. உரிமை பற்றி பேசுகின்றனர்.

சம்பூகன் said...

அசுரன், நமக்கு இடையில் இருக்கும் முரண்பாடும், விமர்சணமும் எப்படி இந்த இந்துத்துவ பார்ப்பன சமூகத்தை மாற்றியமைப்பது, சாதியை ஒழிப்பது, மூடநம்பிக்கைகளை ஒழித்து ஒரு முற்போக்கான சமூகத்தை படைப்பது போன்ற முற்போக்கான அம்சங்களை அடிப்படையாக் கொண்டது, த‌மிழ்ம‌ணி என்ற பெய‌ரில் எழுதுகின்ற பார்ப்ப‌ன‌ ச‌நாத‌னிக‌ளுட‌ன் நாம் கொண்டிருக்கும் விம‌ர்ச‌ணமும் முர‌ண்பாடும் அடிப்ப‌டையிலேயே வேறான‌து, அவர்கள் நாம் எந்த மாற்றத்தையும் செய்து இந்த பார்ப்பனீய‌ சமூகத்தை மாற்றிவிடக்கூடாது என்று இயங்குகிறார்கள், அதற்காகவே கம்யூனிஸ்ட்களையும் பெரியாரியவாதிகளையும் மோதவிட்டு ஆதாயம் அடைய துடிக்கிறார்கள்.

உதார‌ண‌த்திற்கு சொல்ல‌ வேண்டுமானால் "ஆயுத‌ப் ப‌யிற்சி எடுக்கும் ஆர்.எஸ்.எஸ்." என்ற த‌லைப்பில் நீங்க‌ள் போட்டிருக்கும் ப‌திவை இப்பொழுது பார்த்தேன், ஒரு சிறுவ‌னுக்கு காக்கி ட‌வுசர், குல்லாவை மாட்டிவிட்டு, அவ‌ன‌து கையில் துப்பாக்கியை கொடுத்து ஆயுத‌ப்ப‌யிற்சி கொடுக்கும் ஒரு அதிர்ச்சியான‌ புகைப்ப‌ட‌ம் அதில் வெளியிட்டிருக்கிறீர்க‌ள், பிஞ்சுக‌ளின் க‌ர‌த்தில் துப்பாக்கியை கொடுத்து, முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைய தூண்டும் இந்த‌ காட்சியை பார்த்தாலே நெஞ்சு ப‌தைக்கிற‌து, இப்ப‌டி ப‌யிற்சி எடுத்த‌ வ‌ன்முறை கும்ப‌ல்தான் ச‌மீப‌த்தில் ஒரிசாவிலும், சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு குஜ‌ராத்திலும் ப‌ல்லாயிரக்க‌ண‌க்கில் இந்திய‌ ம‌க்க‌ளான‌ முஸ்லீம் ச‌கோத‌ர‌ர்க‌ளை கொன்று குவித்திருக்கிறது.

இப்ப‌டி வ‌ன்முறை, பொறுக்கி கும்ப‌லாக‌ வ‌ள‌ர்ந்து நிற்க்கும் இந்த‌ ஆரிய‌ இந்தும‌த‌ வெறி ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களை க‌ண்டித்து இதுவ‌ரை ஒரு ப‌திவு கூட‌ எழுதாத‌ த‌மிழ்ம‌ணி, க‌ம்யூனிஸ்ட்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து வ‌ன்முறையை க‌ட்ட‌விழ்த்துவிடுவார்க‌ளோ என்று க‌ண்ணீர்விடுவ‌தை பார்க்கும் பொழுது அத‌ன் உள்நோக்க‌த்தையும் அத‌ற்கு பின்னே இருக்கும் ந‌ரித்த‌ன‌த்தையும் என்னால் தெளிவாக‌ புரிந்து கொள்ள‌முடிகிற‌து, மேலும் த‌ந்தை பெரியாரை இவ‌ர்க‌ளுக்கு ஏன் பிடித்திருக்கிற‌து என்றால் அவர் ஜ‌ன‌நாய‌க‌வாதியாம், வன்முறையின் மீது நம்பிக்கையில்லாது இருந்தவராம் ஆனால் க‌ம்யூனிஸ்ட்கள் வன்முறையின் மீது பற்றுகொண்டவர்களாம் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இல்லாத‌வ‌ர்க‌ளாம், அதனால் அவ‌ர்க‌ளை எதிர்க்கிறேன் என்று கூறுகிறார் த‌மிழ்ம‌ணி.
அப்ப‌டியானால் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இல்லாம‌ல் கையில் துப்பாக்கியோடு திரியும் இந்த‌ ஆர்.எஸ்.எஸ் வ‌ன்முறை கும்ப‌லை ஏன் த‌மிழ்ம‌ணி க‌ண்டிக்க‌வில்லை என்ற‌ கேள்விய‌ல்ல‌வா எழுகிற‌து, ஆக‌ இந்த‌ ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற பேச்ச‌ல்லாம் வெறும் முக‌மூடிதான், க‌ம்யூனிஸ்ட்க‌ளை எதிர்ப்ப‌து என்ற போர்வையில் இந்துத்துவ‌ வெறிய‌ர்க‌ளின் வ‌ன்முறைக்கு க‌ருத்திய‌ல் ரீதியாக‌ ஆத‌ர‌வு அளிப்ப‌துதான் த‌மிழ்ம‌ணியின் நிலைப்பாடு.

இப்ப‌டியாக‌ அந்த 'பார்ப்ப‌ன‌'ம‌ணியின் ந‌ரித்த‌ன‌ங்க‌ளை ப‌ட்டியலிட்டுக்கொண்டே போக‌லாம்.

இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால் முற்போக்கு முகாமிலிருக்கும் க‌ம்யூனிஸ்ட்க‌ளும், பெரியாரிய‌வாதிக‌ளும் முட்டிக்கொள்ள‌ வேண்டும் என்ற நோக்க‌ம் த‌மிழ்ம‌ணி என்ற‌ பெய‌ரில் இய‌ங்கும் பார்ப்ப‌ன‌ரின் ப‌திவுக‌ளிலிருந்து தெளிவாக‌ வெளிப்ப‌டுகிற‌து, தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி முற்போக்காளர்கள் அனைவருக்கும் பொது எதிரியாக இருக்கிறார். இத‌னை நாம் முறிய‌டிக்க‌ வேண்டுமானால், இப்பொழுதைய‌ நிலையில் ந‌ம‌க்கிடையே இருக்கும் பிர‌ச்ச‌ணைக‌ளையும், விம‌ர்ச‌ண‌ங்க‌ளையும் விவாதிப்ப‌தை விடுத்து த‌மிழ்மணியை அம்பல‌ப்ப‌டுத்துவ‌தோடு, பார்ப்ப‌னீய‌த்தை ப‌ற்றியும் அத‌ன் ச‌தி வேலைக‌ள் ப‌ற்றியும் விரிவாக‌ எழுத‌வேண்டும்., ம‌ற்ற‌ப‌டி க‌ம்யூனிச‌ம் குறித்த‌ என‌து ச‌ந்தேக‌ங்க‌ளையும், க‌ம்யூனிச‌ அமைப்புக‌ள் ப‌ற்றி என‌க்கிருக்கும் விம‌ர்ச‌ண‌ங்க‌ள் ப‌ற்றியும் இன்னும் இர‌ண்டொரு நாளில் உங்க‌ளுக்கு த‌னிம‌ட‌லில் தெரிவிக்கிறேன்.

//சமிபத்தில்தான் திருவினுடைய ஒரு பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் போது பார்ப்பன் எதிர்ப்பாளர்களிடையே சரியான உரையாடல் இல்லாதது ஒரு பிரச்சினையாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். இதில் யார் பக்கம் தவறு என்று எதுவும் நான் குறிப்பிட்டு பேசவில்லை. //

இதனை நான் முற்றிலுமாக‌ ஏற்றுக்கொள்கிறேன் அசுர‌ன், இந்த‌ ச‌ம‌ய‌த்தில் கூட‌ பார்ப்ப‌ன‌ ப‌திவாள‌ர்க‌ளாக‌ இய‌ங்கும் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் த‌மிழ்ம‌ண‌த்தில் யோனி குறித்து ப‌திவிட்டுக் கொண்டிருப்ப‌து உண்மையிலேயே என‌க்கு வ‌ருத்த‌மாக‌ இருக்கிறது. சித‌ம்பர‌ம் போராட்ட‌த்தில் எப்ப‌டி க‌ட்சி வேறுபாடுக‌ளை க‌ட‌ந்து த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ளாக‌வும், பார்ப்ப‌ன‌ எதிர்ப்பாள‌ர்க‌ளாக‌வும் அனைவரும் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ரோ அது போல‌ இணைய‌த்தில் பார்ப்ப‌ன‌ர்க‌ள் தமிழ்மணி போன்ற‌ ச‌தி செய‌ல்க‌ளில் இறங்கியிருக்கும் சூழ‌லில் பார்ப்ப‌ன‌ எதிர்ப்பு ப‌திவ‌ர்க‌ளும் அனைத்து க‌ட்சி வேறுபாடுக‌ளையும், த‌னிப்ப‌ட்ட‌ முர‌ண்பாடுக‌ளையும் க‌ட‌ந்து பார்ப்ப‌ன‌ எதிர்ப்பு ப‌திவ‌ர்க‌ளாக‌ எழுத‌ வேண்டும் என்று என‌க்கு ஆசையிருக்கிற‌து, இது ப‌ற்றி நான் வைத்திருக்கும் யோச‌னையை இன்னும் இர‌ண்டொரு நாட்க‌ளில் அனைவ‌ருக்கும் தெரிய‌ப்ப‌டுத்துகிறேன்.

//தமிழ்மணி கும்பல் உங்களது பெயரில் என்னுடன் உரையாடும் வாய்ப்பு 99% உள்ளது.//

நூறுச‌த‌வீத‌ம் இருப்ப‌தாக‌வே நான் ந‌ம்புகிறேன், கொஞ்ச‌ம் எச்ச‌ரிக்கையாக‌வே இருங்க‌ள் அசுர‌ன், எனினும் என‌து வேலைக‌ள் முடிந்து ஓய்வாகும் நேர‌த்தில் உங்க‌ளை த‌னிம‌ட‌லில் நான் தொட‌ர்பு கொள்கிறேன்.

//அப்பொழுதே அசுரன் தளத்தில் கிருத்துவ ஏகாதிபத்தியம் போன்ற RSS கும்பலுக்கே உரிய வசனங்களை உதிர்த்துச் சென்றான் இந்த பார்ப்பனமணி(இந்த கும்பலில் நீலகண்டன் போன்றவர்களும் இருக்கலாம்). //

இது போன்ற‌ க‌ருத்துக்க‌ளை நானும் க‌வ‌னித்தேன் அசுர‌ன், இந்துத்துவ வெறியனான‌ அர‌விந்த‌ நீல‌க‌ண்ட‌ன் என்ற‌ ஆர்.எஸ்.எஸ் முழுநேர‌ ஊழிய‌ர் த‌மிழ்ம‌ண‌த்தில் எழுதி வ‌ந்ததையும் அத‌ற்கு பின்பு அவ‌ர் த‌மிழ்ம‌ண‌த்திலிருந்து விர‌ட்ட‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌ங்க‌ளையும் கூட‌ தனிம‌ட‌லில் ஒரு அனானி குறிப்பிட்டிருக்கிறார். கிறிஸ்த‌வ‌ ஏகாதிப‌த்திய‌ம் போன்ற சொற்க‌ளை ஆர்.எஸ்.எஸ் புத்த‌க‌ங்க‌ளில்தான் நான் பார்த்திருக்கிறேன், வேறு எங்கும் கேட்ட‌தில்லை., ஞான‌க‌ங்கை என்ற‌ கோல்வால்க‌ரின் புத்த‌க‌த்தில் கூட‌ இந்த‌ சொற்றொட‌ரை பார்த்த‌ ஞாபக‌ம், இத‌னையெல்லாம் வைத்துப்பார்க்கும் பொழுது இந்த‌ சொற்றொட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தும் த‌மிழ்ம‌ணி கும்ப‌ல் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஆரிய‌ இந்து ம‌த‌வெறி கும்ப‌ல் என்று என்ன‌ வாய்ப்பு இருக்கிற‌து.

கிண‌று வெட்ட‌ பூத‌ம் கிள‌ம்பிய‌ க‌தையாக‌ த‌மிழ்ம‌ணி என்ற பெய‌ரில் எழுதப்படும் த‌மிழ‌ர் விரோத‌ பார்ப்ப‌ன‌ க‌ருத்துக்க‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ போய், அது ஒரு கூட்டுப்ப‌திவு என்றும், அதில் ஆர்.எஸ்.எஸ் ஆரிய‌ இந்தும‌த‌ வெறிய‌ர்க‌ளும் இருக்கிறார்க‌ள் என்ற செய்திக‌ளும் வெளியாகிக் கொண்டிருக்கின்ற‌ன‌. பார்ப்ப‌ன‌ எதிர்ப்பு ப‌திவ‌ர்க‌ள் வெகு ஜாக்கிர‌தையாக‌ இருக்க‌ வேண்டிய‌ த‌ருணம் இது, த‌மிழ்ம‌ணியின் அனைத்து ப‌திவுக‌ளையும் ப‌டித்து இது போன்ற‌ இந்தும‌த‌வெறி கொண்ட‌ சொற்றொட‌ர்களையும் க‌ருத்துக்க‌ளையும் ந‌ண்ப‌ர்க‌ளும், தோழ‌ர்க‌ளும் அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ வேண்டும் என்று ப‌ணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.

//But u did the job at right time... with right spirit.//

ந‌ன்றி அசுர‌ன், ஆரிய‌ இந்தும‌த‌ வெறிய‌ர்களுக்கு பெரியார் எப்பொழுதுமே தொண்டையில் சிக்கிய‌ முள்தான், விழுங்கி உட்செரிக்க‌வும் முடியாது, போக‌ட்டும் என்று புற‌க்க‌ணிக்க‌வும் முடியாது, பெரியாரிய‌வாதிக‌ளும் அப்ப‌டித்தான், அதனால் பெரியாரிய‌வாதிக‌ளை முட்டாளாக‌ க‌ருதிகொண்டு அவ‌ர்க‌ளை கைத்த‌டியாக‌ ப‌ய‌ண்ப‌டுத்த‌ நினைப்ப‌வ‌ர்க‌ளை அம்ப‌ல‌ப்ப‌டுத்தும் நோக்க‌த்தோடே எனது ம‌றுப்புக்க‌ளை தெரிவித்தேன்.

ந‌ட்புட‌ன்
ச‌ம்பூக‌ன்

தமிழரங்கம் said...

தமிழ்மணி என்ற பார்பனியமணி, கம்ய+னிசம் மீது காறி உமிழ்ந்த போது அதன் நோக்கம் மக்களின் உரிமை தொடர்பானதல்ல. மாறாக மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற, தமது சமூக விரோத செய்லகளை பாதுகாக்கின்ற வகையில் தான், பூனுலில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்தியதுகளுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்த ஒப்பாரி வைத்தனர். ஐயா நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்ய+னிஸ்டுகளின் கோரிக்கை முன்வைக்காத படி, சமுகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள். இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்ய+னிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.

உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கழுவறுக்க உருவாக்கின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகள், கூடத்தான்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர முன் அவர்களின் ஜனநாயக மீறலைப்பற்றி பேசும் நீங்கள், அவர்கள் உருவாகாத மாதிரி சமூகத்தின் உரிமைகளை வழங்கிவிடுவதல்லவா நேர்மை. சரியான வழியும் கூட. அதற்காகவா தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போராடுகின்றது.

கம்ய+னிஸ்ட்டுகளுக்கு எதிராக காறி உமிழ்வதை விட, கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளை ஒழித்துக் கட்டலாமே.

கோயில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபடும் உரிமை வழங்க மறுப்பது ஏன். அனைத்து சாதியிரும் பூசை செய்யும் உரிமை வழங்க மறுப்பது ஏன். அதை அவர்களின் சொந்த மொழில் வழிபடும் உரிமை மறுப்பது ஏன்? இப்படி பற்பல. இதை நீங்கள் மறுப்பதால், கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிராகப் போராடுகின்னறனர்.

இதனால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், மற்றவர்களும், அவர்கள் நேசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடுகின்றன்றனர்.

Sathiyanarayanan said...

அருமையான விவாதம், அருமையான பின்னுட்டங்கள் நன்றி தோழர்களே

அனைவரும் ஒன்றிணைந்து பார்ப்பனர்களை எதிர்த்துக் குரலெழுப்ப தகுந்த நேரம் இது

பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழர்களே

நன்றி

அசுரன் said...

////

கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்தியதுகளுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்த ஒப்பாரி வைத்தனர். ஐயா நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்ய+னிஸ்டுகளின் கோரிக்கை முன்வைக்காத படி, சமுகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள். இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்ய+னிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.

உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கழுவறுக்க உருவாக்கின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகள், கூடத்தான்.

/////

சரியான வாரத்தைகள்.

மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகமயமாக்கிவிட்டல் அங்கு புரட்சிகர ஜனநாயக சக்திகளுகு என்ன வேலை இருக்கப் போகிறது?

அசுரன்

Bhagat said...

Good Job comrade... Your replies seperates Water from the Milk... I presume "Tamilmani" is a half-boiled egg.. screaming about communism and socialism.. I hope your replies will cook him more...