கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...

குறிப்பு: கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் முற்போக்காளர்களை மோதவிடும் திருக்காரியத்தை தொடர்வதற்காகவும், தமது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அவதூறுகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பு முகாமை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழ்மணத்திற்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் திருவாளர் 'பார்ப்பன'மணி, தமிழ்மணத்தில் வாய்சவடால் அடித்துக் கொண்டும், விக்கிபீடியாவை கையில் வைத்துக் கொண்டு விவாதம் என்ற பெயரில் மொக்கையடித்துக் கொண்டும் தமிழ்மணி என்ற நாமகரணத்தோடு தமிழ்மணத்த்தில் உலவிவந்தது ஒரு சதிகார பார்ப்பன கும்பல் என்பதையும், அதில் ஆர்.எஸ்.எஸ் பாசிசவாதிகளும் அங்கம் வகிக்கிறார்கள் என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது என்பதையும் சில மாதங்களுக்கு முன்பு நாம் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினோம்., அப்படி எழுதிய பதிவுகளில் நாம் எழுப்பிய தார்மீக ரீதியானஎந்த கேள்விகளுக்கும் விடையளிக்காமல், ஆதாரத்தோடு மறுக்கவும் வக்கில்லாமல் கள்ள மெளனம் சாதித்து வந்த பார்ப்பனமணி கும்பல் அதன் பின்பு ஒருநாள் திடீரெனகாணமல் போனாது.,

இந்த நிலையில் சும்மா இருக்கப் பொறுக்காமல் அரிப்பெடுத்து போன தமிழ்மணி, தனது சதி செயலுக்கு அச்சாரம் போடுவதற்கு மீண்டும் தமிழ்மணத்தில் பிரவேசித்திருக்கிறார். 'தமிழ்மணியின் இந்த இரண்டாம் வருகையை பற்றியும் அவரை மனதார வரவேற்றும் பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு பதிவிட்டிருந்தேன், அந்த பதிவில் அவர் இதுவரை பதிலளிக்காமல் தவிர்த்து வரும் கேள்விகள் அடங்கிய நம்முடைய பழையபதிவுகளையும் பட்டியலிட்டிருந்தேன். ஆனால் தமிழ்மணி தரப்பிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் நமக்கு மெளனம்தான் விடையாய் கிடைத்திருக்கிறது, அதே போல "சம்பூகன் கம்யூனிஸ்ட்தான்" என்ற எப்போதும் போலவே பின்னூட்டத்தில் பல பெயர்களில் முத்திரை குத்தும் முயற்சியும் தொடர்ந்தது, இப்பொழுது நாம் எழுப்பிய கேள்விகளையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு தமிழ்மணி மீண்டும் பதிவிட தொடங்கியிருக்கிறார், எருமைமாட்டின் மீது மழை பெய்தது போல நடந்து கொள்ளும் தமிழ்மணியின் இந்த மழுங்கத்தனமானசெயல் பல்வேறுவிதமான பணி நெருக்கடிகளின் காரணமாக பதிவிடமால் இருந்த நம்மை மீண்டும் இணையத்திற்கு இழுத்து வந்திருக்கிறது, மிழ்மணி இனி தொடர்ந்து திவிடும் நிலையில் அவர் போடும் திவுகளை கொண்டு அந்தபார்ப்பகும்பலை அம்பப்படுத்தும் ம்முடையதிவுகள் தொடர்ந்து வெளிவரும் என்று கிழ்ச்சியோடு சொல்லிக் கொள்வதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.,

கீழே இருப்பது மிழ்மணியை அம்பப்படுத்தி வெளியானம்முடையழையதிவுகளில் ஒன்று, இப்பொழுது ன்னை பார்ப்பஎதிர்ப்பாளர் போலபாவ்லா காட்டிக் கொண்டு மாவோயிஸ்ட்களை நோக்கி விரலை நீட்டும் மிழ்மணி, து பார்ப்பனீயஅடையாளத்தை றைக்கவியலாமல் தம்முடையழையதிவுகளில் கொடுத்த பல வாக்குமூலங்கள் இந்ததிவில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது, அதன் காரமாகவே இதனை இங்கு மீண்டும் திந்திருக்கிறேன்.

கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...


எவ்வளவு தூரம் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் "நான் ரொம்ப உத்தமனாக்கும்" என்று அங்கலாய்த்து கொள்வதற்கும், தனது வழக்கமான புரளி மூட்டைகளை திரும்ப திரும்ப‌ அவிழ்த்து விடுவதற்கும் ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும், இந்த அசட்டு துணிச்சலானது பார்ப்பனர்களுக்கு இயல்பிலேயே கை கூடிய ஒன்று.,

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சட்டமன்றத்திலேயே "நான் ஒரு பாப்பாத்தி" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா.,

எப்பொழுதுமே ஆரிய கொழுப்பேறி அதிகார போதையில் திரியும் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த போதையின் உச்சத்தில் சட்டமன்றத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார், வன்முறை வெறியாட்டத்தின் முழு உருவமான ஜெயலலிதா, கலைஞர் அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசியிருப்பதோடு, சபை உறுப்பினர்களின் கேள்விகளூக்கெல்லாம் பதிலளிக்க துப்பில்லாமல் மூத்த உறுப்பினரான “இனமானப் பேராசிரியர்” என்று கலைஞரால் புகழப்பட்ட பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டவர்களை தரக்குறைவாக‌ பேசியதோடு அவர் கொடுத்த பதிலடி தாங்கமுடியாமல் சபையை விட்டு வெளிநடப்பும் செய்திருக்கிறார். டான்சி வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌த்தால் க‌ண்டிக்க‌ப்ப‌ட்டு, அந்த‌ நில‌த்தை திரும்ப‌ த‌ந்துவிடுவ‌தாக‌ க‌த‌றிய‌ இந்த‌ டான்சி ராணி,தி.மு.க‌ அர‌சு ஊழ‌ல் புகாருக்காக‌ முன்பு டிஸ்மிஸ் செய்யப்ப‌ட்ட‌து என்றும் புளுகியிருக்கிறார்.

இப்ப‌டி தன்னை ப‌ற்றி எழுப்பும் எந்த‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில‌ளிக்காம‌ல் "நீ ரொம்ப யோக்கியமா? " என்ற‌ பாணியில் எதிரணியின‌ரை அச‌ட்டுத்துணிச்ச‌லோடு தாக்குவ‌து, பொய்மூட்டைக‌ளை அவிழ்த்துவிடுவ‌து என்ப‌தெல்லாம் எல்லோரும் ந‌ன்க‌றிந்த‌ பார்ப்ப‌ன‌ த‌ந்திர‌ங்க‌ள்தான்.

இது அரசியல் களத்தில் ஒரு உதாரணம் என்றால் இணையதளத்தில் இந்த பார்ப்பன‌ அசட்டு துணிச்சலுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம் நமது தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணிதான், கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் அவர் திராவிட இயக்கத்தின் மீது வெறுப்பு கொண்ட பின்னூட்டங்களை ஆதர‌வளித்து அனுமதித்திருப்பதை சென்ற பதிவில் எடுத்துக்காட்டியோடு அவரது தளத்தில் "பழைய அனானி" “அனானி 2” என்ற பெயர்களில் தொடர்ந்து உலாவந்த பார்ப்பன இந்துமதவெறி ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அவர் பேராதரவு அளித்தையும் சுட்டிக்காட்டியிருந்தேன், இவ்வளவுக்கு பிறகும் கூட நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காத தமிழ்மணி கும்பல் “நானும் நாத்திகன்தான், பெரியார் ஆதரவாளன்தான்” என்று கூறி தனது சதிச்செயலுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்று முயன்று முயன்று பார்க்கிறது.

பழைய அனானி என்ற பெயரில் எழுதும் இந்துமத வெறியன் பதிலளிக்க துப்பில்லாமல், “சம்பூகனாக எழுதுவது பதிவர் அசுரனா?” என்று ஆருடம் பார்த்துக் கொண்டிருக்கிறான்,. ஆனால் இதற்கு முன்பு அவனை யார் என்று நண்பர்கள் வினவிய பொழுது அவன் அளித்திருக்கும் பதிலை பாருங்கள்.

“அனானியாய் வந்து ஆட்டம் போடுவது என்பதன் பொருள் எனக்குப் புரியவில்லை. வலையுலகில் எல்லோருமே அனானிகள் தான். கருத்துகள் தான் முக்கியம். மெய்ப்பொருள் காண்போமே.” (பதிவு இங்கே)
கருத்துக்கள்தான் முக்கியம் என்று கூறிய இந்த பழைய அனானிக்கு அவரது கருத்துக்களின் வாயிலாகவே அவர் ஆரிய பார்ப்பன இந்துமத வெறிபிடித்த பாசிசவாதி என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கிறேன், அதனை மறுக்க வக்கில்லாமல், இது கம்யூனிஸ்ட்கள் வேலை என்று கதற துவங்கி இருக்கிறது தமிழ்மணி கும்பல் .

நான் பதிவர் அசுரன் தான் என்று வதந்தி கிளப்புகிறார்கள், அசுரன் என்ன ஆர்.எஸ்.எஸ்காரனா? அவர் ஏன் சம்பூகனாக எழுத வேண்டும், அவர் பதிவுகளை நான் படித்த வகையில் அவரும் பார்ப்பனீயத்தை எதிர்ப்பதாகத்தான் எழுதிக் கொண்டிருக்கிறார், பெரியாரை ஆதரித்துத்தான் எழுதியிருக்கிறார், பின்பு எதற்காக அவர் சம்பூகனாக எழுத வேண்டும்?

தனது கொள்கைக்கு நேரதிராக 'த‌மிழ்'மணி என்று பெயர்சூட்டிக் கொண்டு வெட்கங்கெட்ட முறையில் சமஸ்கிருதத்திற்கு ஆதரவளித்து எழுதிக் கொண்டிருக்கும் உன்னைப்பற்றி உனது கருத்துக்களிலிருந்தே அம்பலபபடுத்தி எழுதினால் அதனை மறுக்க துப்பில்லாமல் கிசுகிசு பேசும் ஆரிய பார்ப்பன வெறியனே உனது வேலைகள் இனி இங்கு பலிக்காது. வேறு ஏதாவது பெயரில் வரமுடியுமா என்று யோசி, உனது கார்யகர்த்தனிடம் (ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிரணைப்பாளன்) கேட்டுப்பார் அவன் வேறு எப்படி மோதவிட்டு இரத்தம் குடிக்கலாம் என்று புது யோசனை சொல்வான்.

த‌மிழ்ம‌ணி என்ப‌து செல்வ‌ன் என்னும் ப‌திவ‌ர்தான் என்ப‌தாக‌வும், அந்த‌ கும்ப‌லில் அதிய‌மான், அரவிந்த‌ன் நீல‌க‌ண்ட‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌வும் பின்னூட்ட‌த்தில் ப‌ல‌ ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், ஆதார‌ம் காட்டுகிறார்க‌ள் எனினும் கூட‌ இந்த‌ தொழில்நுட்ப‌ ஆத‌ராங்க‌ளை விட‌வும் த‌மிழ்ம‌ணி த‌ன‌து வாயால் கொடுக்கிற வாக்குமூல‌ங்களை ஆதாரமாக கொண்டே அவர் ஒரு ‘பார்ப்பன’மணி என்பதை நான் அம்பலப்படுத்த‌ விரும்புகிறேன்

சரி அவர் போட்டிருக்கும் சமீபத்திய‌ பதிவினையும் அதில் முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அவரது அசட்டுத்துணிச்சலையும் இனி பார்ப்போம்.

//சிவனடியார் ஆறுமுகசாமி - சிதம்பரம் - தமிழ் வழிபாடு போன்றவற்றில் என் கருத்துக்கள் பெரியார்தாசனின் கருத்துக்களை ஓட்டியவை (நான் நாத்திகன். ஆனால், அதனை முன்னிருத்தாதவன்).//

தமிழ்மணி நாத்திகராம், எப்ப‌டிப்ப‌ட்ட‌ நாத்திக‌ர் என்று நினைக்கிறீர்க‌ள், பார்ப‌ன‌ ப‌னியா சிந்த‌னை என்று நாத்திக‌ர்க‌ளும், க‌ம்யூனிஸ்ட்க‌ளும் ஒதுக்கி த‌ள்ளூம் இந்துத்துவ கறை படிந்த‌ சிந்த‌னைக‌ளூக்கு வ‌க்கால‌த்து வாங்கும் நாத்திக‌வாதி, ந‌ம்ப‌வில்லையானால் இதோ த‌மிழ்ம‌ணி கூறியிருப்ப‌தை பாருங்கள்


//இயற்கையோடு இணைந்து வாழக்கோரும் இந்திய சிந்தனையை பார்ப்பனிய பனியா என்று தினந்தோறும் காலைமுதல் மாலைவரை திட்டுவது நீங்கள்தானே//(ப‌திவு இங்கே)

இப்ப‌டி பார்ப்ப‌னீய‌ ப‌னியா சிந்த‌னைக‌ளுக்கு வ‌க்கால‌த்து வாங்கிய‌ த‌மிழ்ணி இன்று த‌ன்னை நாத்திக‌வாதி என்று கூறிக்கொள்கிறார், அத‌னை நாம் ந‌ம்ப‌ வேண்டும், இப்ப‌டி நாம் கூறிய‌ உட‌னே, "இந்திய‌ சிந்த‌னை என்று பொதுவாகத்தானே கூறினேன்" கூறினேன் என்று த‌மிழ்ம‌ணி ச‌ப்பைக‌ட்டு க‌ட்டுவார், இவ‌ர‌து இந்திய‌ சிந்த‌னை எப்ப‌டிப்ப‌ட்ட‌து என்று அறிந்து கொள்ள‌ அவர‌து இன்னொரு ப‌திவிலிருக்கும் ஸ்டேட்ம‌ண்டை க‌வ‌னித்தால் நாம் அதனை தெளிவாக‌ புரிந்து கொள்ள‌ முடியும்


//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்
மக்கள் விரோதிகளே.//(பதிவு இங்கே)

இதுதான் த‌மிழ்ம‌ணியின் இந்திய‌ சிந்த‌னை, அதாவ‌து ச‌ம‌ஸ்கிருத‌த்தாலும் பூணூலாலும் க‌ட்டி இணைக்க‌ப்ப‌ட்ட‌ பார்ப்ப‌ன மேலாதிக்க‌ம் கொண்ட இந்தியாதான், பார்ப்பணமனி புளகாங்கிதம் அடையும் இந்தியா, அந்த பண்(ணா‌)டைய‌ இந்தியாவில் தோன்றிய‌ பண்(ணா)டை சிந்த‌னைக‌ளான‌ வேத‌ம், ஸ்மிருதி போன்ற‌வைக‌ளை, நாத்திக‌வாதிக‌ளான‌ பெரியாரிய‌வாதிக‌ளும், மார்க்சிய‌வாதிக‌ளும் ம‌றுக்கின்ற‌ கார‌ண‌த்தால்தான் அவ‌ர்க‌ள் மீது சீற்ற‌ம் கொள்கிறார், த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌ம‌ணி.

சமஸ்கிருதத்தால் இணைக்கப்பட்ட இந்தியாவை கனவு காண்கிறாரே தமிழ்மணி இது எந்த சிந்தனையின் தொடர்ச்சி என நினைக்கிறீர்கள், இதோ,


இந்த எல்லா மொழிகளுக்கும்(தமிழ், வங்காளம், மராட்டி, பஞ்சாபி
போன்றவை) ஜீவ ஊற்றாக உணர்வூட்டி வருவது மொழிகளுக்கெல்லாம் அரசி போன்ற தேவமொழியான
சம்ஸ்கிருதம் ஆகும். அதனுடைய பொருட்செறிவினாலும், ஆன்மீக தொடர்பினாலும், அதுவே நம் நாட்டு மக்கள் கருத்தை வெளிப்படுத்த உதவும் பொதுமொழியாக இருக்கும் தகுதியுடையது
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.49)
நமது தேசிய மொழி பிரச்சணைக்கு வழி காணும் முறையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பெறும்வரை, வசதிக்காக ஹிந்தி மொழிக்கு நாம் முன்னுரிமை தர வேண்டியிருக்கும்
-(ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை' 2 பாகம் பக்.51)

ந‌ம‌து அன்பிற்குரிய‌ த‌மிழ்ம‌ணி(எ)பார்ப்ப‌ன‌மணி, இந்தியாவின் தொட‌ர்பு மொழி ச‌ம‌ஸ்கிருதம்தான் என்பதாக‌ வ‌ரிந்துக‌ட்டி வாதாடுவ‌த‌ன் இர‌க‌சிய‌ம் இப்பொழுது புரிகிறதா நண்பர்களே?

ச‌மஸ்கிருத‌த்தாலும், இந்தியாலும் இணைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த இந்துராஷ்டிர‌ம் ப‌ற்றி அய்யா பெரியாரின் க‌ருத்தை பாருங்க‌ள்


“தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது.”

சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு



இப்பொழுது புரிந்திருக்குமே தமிழ்மணி எப்படிப்பட்ட நாத்திகவாதி என்று, நவீண வகை ஜனநாயகவாதிகள் போல, இவர் இந்து ராஷ்டிரம் பேசுகின்ற நவீண வகை நாத்திகவாதி.

அடுத்து அவ‌ர் கூறுகிறார் சித‌ம்ப‌ர‌ம் விவாக‌ரத்தில் பெரியார்தாச‌னின் க‌ருத்துதான் அவ‌ருடைய‌ க‌ருத்தாம்.,

அட‌ அட‌ இப்பொழுது க‌ம்யூனிஸ்ட்க‌ளை திட்டுவ‌த‌ற்காக‌ பெரியார்தாச‌னோடு போய் ஒட்டிக்கொள்ளும் த‌மிழ்ம‌ணி சென்ற ப‌திவில் அவ‌ரை ப‌ற்றி எழுதிய‌ வ‌ரியை பாருங்க‌ளேன்.

//பெரியார்தாசன் சிவனை கேவலமாக பேசியிருக்கிறார். மருதையன் நாத்திகர். சிவனடியார் ஆறுமுகசாமி முன்னிலையிலேயேகடவுள் இல்லை, கடவுளை பரப்பியன் அயோக்கியன், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி போன்றவற்றை கூறப்போகிறீர்களா? சிவனெல்லாம் ஒரு கடவுளா என்பவற்றை பேசுவீர்களா?//
(பதிவு இங்கே)

இப்ப‌டியெல்லாம் சென்ற‌ ப‌திவில் நாத்திக‌ர்க‌ளை நோக்கி கேள்வி எழுப்பிவிட்டு, பெரியார்தாச‌ன் சிவ‌னை நோக்கி கேவ‌ல‌மாக‌ பேசினாரே என்று சின‌ந்து பேசிவிட்டு, இன்று "பெரியார்தாச‌னின் நிலைப்பாடும் என‌து நிலைபாடும் ஒன்றுதான், நானும் நாத்திக‌ன்தான்" என்று ஒருவ‌ர் பேசுவாரேயானால் அவ‌ர் எவ்வ‌ள‌வு பெரிய‌ அயோக்கிய‌னாக‌ இருக்க‌வேண்டும், ந‌ம்மை எவ்வ‌ள‌வு தூர‌த்திற்கு முட்டாள் என்று அவ‌ர் நினைக்க‌ வேண்டும். நான் கூறிய‌ பார்ப்ப‌னீய‌ அச‌ட்டுத்துணிச்ச‌ல் த‌மிழ்ம‌ணியிட‌ம் எவ்வ‌ள‌வு இருக்கிற‌து பார்த்தீர்க‌ளா, ந‌ண்ப‌ர்க‌ளே?

//ஆனால், இது சம்பந்தமாக மகஇக என்ற கம்யூனிஸ்டு இயக்கம் இதனை உபயோகித்து ஆள் சேர்க்க இறங்கியபோது, இதன் அபாயத்தை உணர்த்தும் விதமாக பதிவுகள் எழுதினேன். கம்யூனிஸ எதிர்ப்பை வழக்கம்போல, பார்ப்பன ஆதரவு, திராவிட எதிர்ப்பு என்று திரிக்கும் வேலைகள் நடந்துகொண்டிருப்பது எனக்கு அதிர்ச்சி இல்லை. இதனை எதிர்பார்த்தேன்.//

என்ன‌ அபாய‌த்தை, உண‌ர்த்தும் வித‌மாக‌ ப‌திவுக‌ள் எழுதினீர்க‌ள், த‌மிழ் க‌ருவறையில் நுழைந்துவிடும் அபாய‌த்தை உண‌ர்த்துவ‌தாக‌வா, ஏதோ நீங்க‌ள் இந்த‌ ப‌திவு எழுதிய‌ பிற‌கு அந்த‌ ஒரு ப‌திவை வைத்து உங்க‌ளை 'திராவிட‌ எதிர்ப்பு' 'பார்ப்ப‌ன‌ ஆதரவு' ப‌திவ‌ர் என்று கூறிய‌து போல‌ பேசுகிறீர்க‌ளே த‌மிழ்மணி, உங்க‌ள் ப‌திவில் ப‌ல‌ கால‌மாக‌ ப‌ழைய‌ அனானி என்ற‌ பெய‌ரில் "திராவிட‌ இன‌வெறி அர‌சிய‌ல்" என்றும் "கேவ‌ல‌மான‌ திராவிட‌ அர‌சிய‌ல்" என்றும் திராவிட‌ எதிர்ப்பு பின்னூட்ட‌ங்க‌ள் போட்டு வந்திருக்கிறார், நேற்றைய‌ இந்த‌ ப‌திவிலே அதனை நான் எடுத்துக்காட்டியிருக்கிறேன். இப்ப‌டி போட‌ப்ப‌ட்ட‌ பின்னூட்ட‌திலிருக்கும் இந்த‌ க‌ருத்துக்க‌ளுக்கு ஒருமுறை கூட‌ நீங்க‌ள் எந்த‌ ஆட்சேப‌னையும் தெரிவிக்க‌வில்லையே அத‌ன் கார‌ண‌ம் என்ன‌ த‌மிழ்ம‌ணி?

//மேற்குலகின் ஏஜண்டாக தெரசாவும் கத்தோலிக்க திருச்சபையும், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவ என் ஜிஓக்களும் செயல்படுகின்றனவோ, அதே போல சீனாவின் ரஷியாவின் ஏஜண்டாக இந்தியாவின் கம்யூனிஸ்டு கட்சிகளும் அவர்களின் என் ஜி ஓக்களும் செயல்படுகின்றன என்பதையும் நேரடியாக எழுதியுள்ளீர்களா? படிக்க விரும்புகிறேன்.
என்னைப்பொருத்தமட்டில், எவ்வாறு தெரசாவின் புனித பிம்பம் மேற்குலகால் இந்தியாவில் கட்டமைக்கப்படுகிறதோ அதே போல, ரஷியர்களாலும் சீனர்களாலும், இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள், அறிவுஜீவிகள் புனித பிம்பமும் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்திய கருத்தாக்க நாணயத்தின் இரண்டு பக்கங்களே இவர்கள்.
ஆனால் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.// (பதிவு இங்கே)


இப்ப‌டி ஒரு ப‌திவிலே நீங்க‌ள் எழுதியிருக்கிறீர்க‌ள், அதாவ‌து மேற்குலக மதமான‌ கிறிஸ்த‌வ‌த்தின் ஏஜென்டாக‌ தெர‌சாவும், க‌த்தோலிக்க‌ திருச்ச‌பையும், கிறிஸ்த‌வ‌ என்.ஜி.ஓக்க‌ளூம் செய‌ல்ப‌டுவ‌தாக‌ குறிப்பிட்டு அவ‌ர்க‌ளோடு க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ஒப்பிட்டு, இவ‌ர்க‌ள் இருவ‌ருமே ஏகாதிப‌த்திய(அதாவ‌து கிறிஸ்த‌வ‌ ஏகாதிப‌த்திய‌ம்) க‌ருத்தாக்க‌த்தின் இர‌ண்டு நாண‌ய‌ங்க‌ள் என்று முடிவுக்கு வ‌ந்து

//மேற்குலகின் புனித பிம்பங்கள் உருவாக்கத்தின் இடையில் ஒரு சிலருக்கு ஆறுதலோ, உணவோ பால்பவுடரோ, தற்காலிக மன ஆறுதலோ கிடைக்கிறது.//

இப்ப‌டி குறிப்பிடுகிறீர்க‌ள், என‌க்கு தெரிந்த‌ வ‌ரையில் 'கிருத்துவ‌ ஏகாதிப‌த்திய‌ம்' என்ற‌ க‌ருத்தாக்க‌மே இந்துத்துவ‌ வெறியர்களுடையது, அதை விட 'பால்பவுடருக்காக' மதம் மாறுகிறார்கள் என்று மதம்மாறுகின்ற மக்களை பார்த்து இழிவுபடுத்துவதும், அலறுவதும், அச்சுஅசல் இந்துமதவெறியர்களுக்கே உரிய கருத்து, இப்ப‌டி ஒரு இந்துத்துவ‌ க‌ருத்தை வைத்திருக்கும் பார்ப்ப‌ன‌ வெறியரான‌ நீங்க‌ள் "நான் திராவிட‌ எதிர்ப்பாள‌ன் அல்ல" என்று கூறினால் எவ‌னும் வாயால் சிரிக்க‌மாட்டான் தமிழ்மணி.

//சமீபகாலமாக ஒரு டிரண்ட் நட்ந்துவந்துகொண்டிருக்கிறது. அது திராவிட/பார்ப்பன எதிர்ப்பு பதிவர்களை குறி வைத்து அவர்களை கம்யூனிஸ்டு கட்சிக்குள் உள்ளிழுக்கும் விதமாக கம்யூனிஸ்டுகள் (ஒரே ஆளா, அல்லது கும்பலா என்று தெரியாது) பல பதிவுகளை துவங்கி ஒரே கட்டுரையை பல்வேறு இடங்களில் பதிந்தும் ஒரு திட்டமிட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியிருந்தனர்.//

ப‌ல‌ கால‌மாக‌வே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு டிர‌ண்ட் ந‌ட‌ந்துவ‌ருவ‌தாக‌ எங்க‌ள‌து ந‌ண்ப‌ர்க‌ளும் தோழ‌ர்க‌ளும் கூறுகிறார்க‌ள் த‌மிழ்ம‌ணி, அதாவ‌து இஸ்லாமிய‌ர்க‌ளின் பெய‌ரில் ஆபாச‌ ப‌திவு தொட‌ங்கி எழுதுவ‌து, ந‌டுநிலை நாட‌க‌மாடி சிண்டு முடிவ‌து, நேற்று கூட‌ எங்க‌ள‌து அ.மு.க‌ ந‌ண்ப‌ர்க‌ள் இது போன்ற பார்ப்ப‌ன‌ ச‌தி ஒன்றை அம்ப‌ல‌ப்ப‌டுத்தியிருக்கிறார்க‌ள், இஸ்லாமிய‌ர் பெய‌ரிலும், கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் பெய‌ரிலும் ப‌திவுக‌ளை தொட‌ங்கி இருவ‌ரையும் மோத‌விடும் ச‌தியை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள்,க‌ம்யூனிஸ்ட்க‌ளையும் ம‌ற்ற‌ முற்போக்காள‌ர்க‌ளையும் மோத‌விடும் ச‌தியை நீங்க‌ள் செய்து கொண்டிருக்கிறீர்க‌ள், இதெல்லாம் எத‌ற்காக‌ பார்ப்ப‌ன‌ர்க‌ள் செய்கிறார்கள், த‌ங்க‌ளுடைய‌ மேலாதிக்க‌ம் கொண்ட‌ இந்த‌ ச‌மூக‌த்தை க‌ம்யூனிஸ்ட்க‌ளோ பெரியாரிய‌வாதிக‌ளோ மாற்றிவிட‌க்கூடாது என்ப‌துதான் அவ‌ர்க‌ள‌து நோக்க‌மாக‌ இருக்கிற‌து. இதற்காக‌ ப‌ல‌ர் சேர்ந்து ஒரு ப‌திவை எழுதுவ‌து, ப‌ல‌ ப‌திவை ஒருவ‌ர் எழுதுவ‌து என்று பார்ப்ப‌ன‌ர்க‌ள் ப‌ல்வேறு திட்ட‌மிட்ட‌ அனுகுமுறையை கையாண்டு வ‌ருகிறார்க‌ள்.

//இதன் விளைவுகள் நீண்டவை.//

ஆனால் பார்ப்ப‌ன‌ர்க‌ள் கையாளும் இந்த‌ கேவ‌லமான‌ உத்தியின் விளைவுக‌ள் எப்பொழுதுமே புஸ்வாண‌ம்தான் என்று ந‌ண்ப‌ர்க‌ள் கூறுகிறார்க‌ள், பார்ப்ப‌ன‌ர்க‌ள் இப்ப‌டியெல்லாம் ச‌திச்செய‌லிலே இற‌ங்கி ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் கையும் க‌ள‌வுமாக‌ வ‌ச‌மாக‌ மாட்டிய‌துதான் த‌மிழ்ம‌ண‌த்தின் க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறாக‌ இருக்கிற‌து.


//கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய வீழ்ச்சியை கம்யூனிஸ்டுகள் தமிழ்நாட்டில் சந்தித்தார்கள். அது பற்றி "கலைஞருக்கு பாரத ரத்னா" என்ற பதிவில் சுட்டியிருந்தேன்.

திராவிட முன்னேற்ற கழகமும், பெரியாரிய சிந்தனைகளும், அன்றைக்கு பிரபலமாக இருந்த கம்யூனிஸ்டு சிந்தனைகளுக்கும், காங்கிரஸ் சிந்தனைகளுக்கும் மாற்றாக வந்து, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இனத்தினரின் எழுச்சியாக வந்தது.//

இப்படியாக ஆரம்பித்து தனது அபத்தங்களை அள்ளித்தெளித்திருக்கிறார் தமிழ்மணி, திராவிட‌ இய‌க்க‌ங்க‌ள் க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளை ஒழித்துக்க‌ட்டுவ‌த‌ற்காக‌வே உருவாக்க‌ப்ப‌ட்டிருப்ப‌து போல‌ எழுதியிருக்கிறார், அத‌ற்கு பின்பு வழ‌க்க‌ம் போல‌ க‌ம்யூனிச எதிர்ப்பு ஜ‌ல்லி, இடையே பா.ஜ‌.க‌ ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை கொண்ட‌ இயக்க‌ம் என்ற‌ ப‌ச்சை புளுகு வேறு.,

சரி, அவரது வ‌ழ‌க்க‌மான‌ க‌ம்யூனிச‌ எதிர்ப்பு ஜ‌ல்லிக‌ளை புற‌ந்த‌ள்ளிவிட்டு, ம‌ற்ற‌ விச‌ய‌ங்க‌ளின் மீது ம‌ட்டும் க‌வ‌ன‌ம் செலுத்துவோம், த‌மிழ்ம‌ணி கூறுகிறார் அன்று பிர‌ப‌ல‌மாக‌ இருந்த‌ க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக‌ளுக்கு, பெரியாரிய‌ இய‌க்க‌மும், தி.மு.க‌வும் மாற்றாக‌ இருந்த‌தாம் இது எவ்வ‌ள‌வு பெரிய‌ அப‌த்த‌ம். க‌ம்யூனிஸ கொள்கை த‌மிழ‌க‌த்தில் பிர‌ப‌ல‌மான‌த‌ற்கு காரண‌மே த‌ந்தை பெரியார்தான்,

"கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை" தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்து தனது குடியரசு பத்திரிக்கையில் வெளியிட்டவர் தந்தை பெரியார், பகத்சிங்கை வெள்ளை அரசாங்கம் தூக்கிலிட்ட பொழுது, தேசபக்தர்கள் என்று தம்மை கூறிக்கொண்டவர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கி அதனை கண்டிக்க தயங்கிய நேரத்தில், பகத்சிங் ஒரு பொதுவுடைமைவாதி என்ற காரணத்துக்காகவே தனது குடியரசு பத்திரிக்கையில் ஆதரித்து எழுதியதோடு வெள்ளை அரசாஙக்த்தை கண்டிக்கவும் செய்தார் அய்யா பெரியார்(ஆதாரம்: "நான் நாத்திகன் ஏன்" புத்தகத்தின் பின்னிணைப்பு).,

தனது இறுதி மூச்சுவரை தந்தை பெரியார் கம்யூனிச கொள்கைகளின் மீது ஈர்ப்பு கொண்டவராகவே இருந்தார், அதற்கு எவ்வளவோ ஆதாரங்களை காட்டமுடியும், அவர் கம்யூனிஸ்ட்களோடு கொண்டிருந்த முரண்பாடு என்பது நடைமுறையை அடிப்படையாக கொண்டது, பிறவி இழிவுக்கு எதிராக‌ ஒரு சமுதாய புரட்சிக்காக போராடாமல், ஏழை பணக்காரன் என்ற பேதத்தை ஒழிப்பதாலோ அரசியல் புரட்சி நடத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதாலோ எதுவும் நடந்துவிடாது என்பதுதான் தந்தை பெரியாரின் கருத்தாக இருந்தது ஆனால் இறுதிமூச்சுவரை அவர் கம்யூனிச கொள்கைகளை என்றுமே எதிர்த்ததில்லை.,

இரசியா போய் அங்கு கம்யூனிஸ்ட்களால் ஏற்பட்டிருக்கும் அபாரமான வளர்ச்சியையும், அங்கு நிலவும் சமத்துவ உறவினையும் கண்டுவந்த பெரியார் கம்யூனிசத்தின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், அதற்கு பின்பு அவர் பேசிவந்த மேடைகளில் தீவிர பொதுவுடைமை வாடை வீசியது, இதற்காக அவரை வெள்ளை அரசாங்கம் தண்டிக்க முற்பட்டது. இது பற்றி ஒரு கூட்ட‌த்தில் அவ‌ர் பேசும் பொழுது இப்ப‌டி குறிப்பிட்டார்

"நான் இர‌சியாவுக்கு போவ‌த‌ற்கு முன்பே, பொதுவுடைமைத் த‌த்துவ‌த்தை சுய‌ம‌ரியாதை இய‌க்க‌த்துட‌ன் க‌ல‌ந்து பேசிவ‌ந்த‌து உண்மைதான், ர‌சியாவில் இருந்து வ‌ந்த‌வுட‌ன் அதை இன்னும் தீவிர‌மாக‌ பிர‌ச்சார‌ம் செய்த‌தும் உண்மைதான்."

(23.3.1936 பட்டூக்கோட்டையில் பேசியது)

பிறவி இழிவை ஒழிக்கும் சமூக புரட்சிக்கென பெரியார் செயலாற்றினாலும் கூட‌பொதுவுடைமைக் கொள்கை மீதான‌தனது பற்றையும், பிரச்சாராத்தையும் அவர் எப்பொழுதுமே விட்டுவிடவில்லை, இதன் காரணமாகத்தான், அவர் நடத்திவந்த விடுதலை பத்திரிக்கை, ரசிய புரட்சியின் 50வது ஆண்டு மலரை 1966ல் கொண்டுவந்தது. அதில் எழுதிய‌ த‌ந்தை பெரியார் இப்ப‌டி எழுதினார்.

"இந்நாடு க‌ம்யூனிச‌ நாடாவ‌தே என் விருப்ப‌ம். சோச‌லிச‌ம்,
க‌ம்யூனிச‌ம்,ச‌ம‌த‌ர்ம‌ம் ப‌ர‌வுவ‌த‌ற்காக‌ என்று இர‌சியாவே இங்கு வ‌ந்தாலும் நான் வ‌ர‌வேற்பேன்"

(9.2.1966 விடுத‌லை)

மேற்க‌ண்ட‌ அவ‌ருடைய‌ வாக்கிய‌ம் அவ‌ர் க‌ம்யூனிச‌த்தின் மீது எந்த‌ அள‌வுக்கு ஈர்ப்பு கொண்டிருந்தார் என்ப‌தை நிரூபிக்கிற‌த‌ல்ல‌வா? முத‌லாளித்துவ‌மும் த‌னிம‌னித‌ சொத்துரிமையும் ஒழிய‌ வேண்டுமென்று பெரியார் எழுதியதை பாருங்க‌ள்

"என‌வே, த‌னிம‌னித‌ சொத்துரிமை ஒழிய‌ வேண்டும்,பிற‌ர் உழைப்பில் ப‌டோடோப‌ வாழ்க்கை ந‌ட‌த்துவ‌தும், அதிக‌ப‌டியான‌ பொருள்க‌ளூக்கு அதிப‌தியாய் இருப்ப‌தும் பெருமையான‌ வாழ்க்கை என்று க‌ருதுகிற‌ மூட‌ந‌ம்பிக்கை ஒழிய‌ வேண்டும், இதில் க‌வுர‌வமும், மரியாதையும் இல்லை என்ப‌து தெளிவாக்க‌ப்ப‌ட‌வேண்டும்"

இப்ப‌டி பேசிய‌ பெரியாரைத்தான் க‌ம்யூனிச‌த்திற்கு எதிராக‌வே க‌ட்சி தொட‌ங்கி முத‌லாளிக‌ளுக்கு சேவை செய்த‌து போல‌ புளுகுகிறார் த‌மிழ்மணி.,

பெரியார், புக‌ழ்பெற்ற‌ அவ‌ர‌து இறுதிப் பேருரையிலே பேசிய‌ சொற்கள் அவரது உள்ளக்கிடக்கையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. க‌ம்யூனிச‌ கொள்கை என்ப‌து அனைத்து வ‌கை ஏற்ற‌த்தாழ்வுக‌ளுக்கும் எதிரான‌து, அது சாதிய‌ இழிவையும் க‌ண்டிக்க‌ வேண்டும் என்று உண‌ர்ந்திருந்த‌ த‌ந்தை பெரியார், அத‌னை செய்யாத‌ க‌ம்யூனிஸ்ட்க‌ள் மீது த‌ன‌து வெறுப்பை வெளிப்ப‌டுத்துகிறார்

"இந்த‌க் க‌ம்யூனிஸ்டே(இந்தியாவிலிருப்பவர்கள்) வ‌ந்துவிட்டான் என்றால், அவ‌ன் காசுக்கு என்றால் என்ன‌ வேணும்னாலும் ப‌ண்ணுவானே, அவன‌ல்ல‌வா ச‌த்த‌ம் போட‌ வேண்டும் என‌க்கு ப‌திலாக‌? எங்க‌ளை த‌விர‌ நாதியில்லை இந்த‌ நாட்டில்"(19.12.1973)

உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக
இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். பொருளாதாரத் துறை பேதமொழிப்பு வேலை எங்களுக்கு விரோதமானதல்ல. ஆனால், சமூதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவம் கிடைக்கும் என்கிறோம். ஆனால், சமூதாயத்துறை பேதமொழிப்புக் காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்வதில்லை.

(27.4.1953 அன்று, மன்னார்குடி வல்லூரில் ஆற்றிய உரை.)

பெரியார் பார்ப்பன கட்சிகளாக இயங்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத்தான் எதிர்த்தாரே ஒழிய கம்யூனிச கொள்கைக‌ளை எதிர்க்க‌வில்லையென்ப‌த‌ற்கு இப்படி நாம் பல ஆதாரங்களை எடுத்துக்காட்ட முடியும்., ஆனால் த‌மிழ்ம‌ணி என்கிற‌ 'பார்ப்ப‌ன‌'ம‌ணி எந்த‌ ஆதாமும் இல்லாம‌ல் பிர‌ப‌ல‌மாக இருந்த‌ க‌ம்யூனிச‌த்திற்கு மாற்றாக‌ பெரியாரிய‌ம் வ‌ந்த‌து என்று கூறுகிறார், ஆனால் உண்மையில் க‌ம்யூனிச‌த்தை இந்த‌ நாட்டில் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தியதே த‌ந்தை பெரியார்தான்.,

உண்மைகள் இப்படி இருக்கும் பொழுது தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்கேற்ப பெரியாரிய கொள்கைகளை கம்யூனிசத்திற்கு எதிராக நிறுத்துகிறார். தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணி.

இப்படி அவர் நிறுத்துவதன் நோக்கம் என்ன என்பதை நாம் சொல்லுவதை காட்டிலும், அவரது இந்துத்துவ சகலப்பாடியான கால்கரி சிவா இட்டிருக்கும் பின்னூட்டத்திலிருந்து எடுத்துக்காட்டுவது இங்கு சிறப்பாக இருக்கும்

கால்கரி சிவா said...
எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக திருப்பிவிட்டீர்கள்?

ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் சரியா?

சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்.(பதிவு இங்கே)

த‌மிழ்ம‌ணியின் நோக்க‌த்தை, அவ‌ரது வெற்றியை பாராட்டும்வித‌மாக‌ கால்கரி சிவா அவ‌ர‌து பின்னூட்ட‌த்தில் இப்ப‌டி குறிப்பிட்டிருக்கிறார்.

//நக்ஸ்லைட்டுகளால் எந்த தொழில் முன்னேற்றம் இல்லையோ அதே தொழில் முன்னேற்றத்தை தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அடையும்போது அதனை கெடுக்கும் வேலையையும், அந்த தொழிற்துறையால் படித்து பட்டம் பெற்று வேலையில் இருக்கும் இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்து தன்னை வளர்ப்பதையும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் செய்து வருகின்றன.//

முற்போக்காளர்களை மோதவிட்டு இரத்தம் குடிக்க துடிக்கும் தமிழ்மணியின் கட்டுரை, இப்படி இராம‌கோபாலய்ய‌ர் பிராண்டு நக்ஸலைட்டு பூச்சாண்டி காட்டியபடி தொடர்கிறது.

இப்ப‌டியாக‌ தொடர்ந்து கொண்டே போகும் த‌மிழ்ம‌ணியின் அப‌த்த‌ங்க‌ள், அத்த‌னைக்கும் நாம் ப‌தில‌ளிக்க‌ இற‌ங்கினால் நாளை நம்மால் ப‌திவு போட‌ முடியாது ஏனென்றால் த‌லை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சுற்றி பைத்திய‌ம் பிடித்துவிடும்.,

இத‌ற்கெல்லாம் ப‌திலளித்து த‌மிழ்ம‌ணியை நாம் அம்ப‌ல‌ப்ப‌டுத்துவ‌தை காட்டிலும், ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியன் ஒருவன் திராவிட இயக்கங்களின் மீது வெறுப்பை கக்கி தமிழ்மணியின் தளத்தில் போட்டிருந்த பின்னூட்டங்களை பற்றியும், அதனை அவர் எந்த ட்சேபனையும் இல்லாமல் பதிவாக எடுத்துப் போட்டு அவனை ஊக்கப்படுத்தியது பற்றியும் இரண்டு நாட்களுக்கு முந்தைய பதிவில் விளக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறேன், இந்த பதிவிலேயே தமிழ்மணி வெளியிட்டிருக்கும் இந்துத்துவ கருத்துக்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். இதெற்கெல்லாம் அவ‌ர் என்ன‌ ப‌தில‌ளிக்கிறார் என்ப‌தை கேட்டாலே போதுமான‌து, ஒரு மிகச்சிற‌ந்த‌ குட்டிக்க‌ர‌ண‌ காட்சியை நாம் காண‌ முடியும்., அல்ல‌து க‌ம்யூனிச‌ ச‌தி என்ற‌ அல‌ற‌லை கேட்க‌ முடியும்.,

7 comments:

சம்பூகன் said...

test

தமிழச்சி said...

அழகான சான்றுகளுடன் அருமையாக கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப் போன்று நான்கு பேர்கள் இருந்தால் போதும்! இணையத்திற்குள் ஊடுருவ முயலும் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஒழித்துக் கட்டிவிடலாம்.

Anonymous said...

நீங்க சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒரே வரியில் மறுத்துள்ளான் அந்த மொள்ளமாறி பார்ப்பனமணி. அதாவது அவனும் பார்ப்பன எதிர்ப்பாளனாம். அப்படியென்றால் இது வரை அவன் பதிவில் எழுதியதெல்லாம் என்ன அவன் அப்பனா வந்து எழுதினான்?

Anonymous said...

Just like paarpaan mani, there is one more reentry recently in the name of "paraman pitha" (note the christian name) this guy was driven out of thamizhmanam long back by asuran, koviKannan, others. And before that this guy was chucked out from thinnai and marathadi. i think these are all same guys from paarpana gumbal

ஏகலைவன் said...

நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.

குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.

இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.

இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.

கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.

அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.

அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள்.

மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம்.

இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது.

இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள்.

இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?

சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?

இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்.

"நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?

அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???"

சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம்.

இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.


ஏகலைவன்.

Anonymous said...

//ஒரு மிகச்சிற‌ந்த‌ குட்டிக்க‌ர‌ண‌ காட்சியை நாம் காண‌ முடியும்., அல்ல‌து க‌ம்யூனிச‌ ச‌தி என்ற‌ அல‌ற‌லை கேட்க‌ முடியும்., ///


ஹா....ஹா... இரண்டும் நடந்துவிட்டது. நானும் பார்ப்பன எதிர்பாளந்தான் என்ற ஒரு குட்டிகரணமும், தமிழ்மணியை எதிர்ப்பவர்கள் எல்லாம் கம்யுனிஸ்டுகள்தான் என்று அலறலும் நடந்தேறிவிட்டது.

தமிழ் ஓவியா said...

மிகச்சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று.பார்ப்பனிய கும்பலுக்கு சரியான பதிலடியை சான்றுகளுடன் தந்துள்ளீர்கள்.பாராட்டுக்கள்.